சிதைந்துவிட்ட இலங்கை பொருளியலைச் சரிப்படுத்துவது நீண்ட நெடும் கடும் பணி

சிதைந்துவிட்ட இலங்கை பொருளியலைச் சரிப்படுத்துவது நீண்ட நெடும் கடும் பணி

4 mins read
089a1f5d-1e72-4140-af05-543b959446bc
-

நிறுவனங்கள் நொடித்­துப்போகும் நிலை என்பது, மெது­வாக தொடங்கி பிறகு திடீ­ரென்று நிகழ்ந்­து­வி­டும். நாடு­களுக்கும் இது பொருந்­தும். 2020ஆம் ஆண்டில் கொவிட்-19 தலைதூக்­கி­யது முதலே இலங்கை பொரு­ளி­யல் நெருக்கடியை எதிர்­நோக்­கிய நாடு.

தொற்­றுக்கு முன்னே பல ஆண்டு­களாக பொரு­ளி­ய­லைச் சரி­வர நிர்­வகிக்­காத நிலை; அதி­கார நிர்­வாகம் மெத்­த­ன­மாக இருந்­தது; உணவு, எரி­பொ­ருள் விலை உயர்வு போன்ற புற நெருக்­க­டி­கள் இருந்­த­போ­தி­லும் அவற்றைச் சமாளிக்­க­த் தோ­தாக மாறிக்­கொள்ள விருப்­பம் இல்­லா­ம­லேயே இருந்து வந்­தது எல்லாம் சேர்ந்து இலங்கையின் நிலை­மையை மோச­மாக்கி­விட்­டன. சில மாத­ங்க­ளிலேயே அங்கு நிலைமை பேர­ழி­வா­கி­விட்­டது.

அனைத்து­லக பண நிதி­யம், வழக்கம்­ போல் இந்த ஆண்­டும் இலங்கை அதி­கா­ரி­களைக் கலந்து ஆலோ­சித்த பிறகு மார்ச் மாதம் இலங்கை நில­வ­ரங்­க­ளைக் கணித்து ஓர் அறிக்கை வெளி­யிட்­டது.

மொத்த உள்­நாட்டு உற்­பத்தி இந்த ஆண்டு பூஜ்­ஜி­யத்­திற்­குக் கீழே 7% வரை இறங்­கி­வி­டும் என்று அது தெரிவித்தது. மார்ச்­சில் பண­வீக்­கம் 14% ஆக இருந்­தது. இது ஜூனில் 55% ஆகி­விட்­டது.

US$2.2 பில்­லி­ய­னாக இருந்த அந்­நியச் செலா­வணி ஒன்­று­மில்­லா­மல்­போய்­விட்­டது. இலங்­கைக்கு US$51 பில்­லி­யன் கடன் இருக்­கிறது. இலங்கை நாணய மதிப்பு மார்ச் மாதம் டால­ருக்கு சுமார் 230 ரூபா­யாக இருந்­தது. அது டால­ருக்கு சுமார் 360 ரூபாய் என்ற அள­வுக்­குக் குறைந்­து­விட்­டது. நாட்­டில் ஏறக்­கு­றைய எரி­பொருள் இல்லை என்ற நிலை ஏற்­பட்டு­விட்­டது.

ஆர்ப்­பாட்­டக்­காரர்­கள் வீதி­களில் இறங்­கி­னர். அர­சாங்­கம் சீர­ழிந்து அதி­பர் நாட்டை­விட்டு ஓடி­விட்­டார். பிர­த­ம­ரும் நிதி அமைச்­ச­ரு­மான ரணில் விக்­ர­ம­சிங்க, மத்திய வங்கி ஆளு­நர் உள்­ளிட்ட எஞ்சி இருக்­கின்ற தலை­வர்­கள், பொரு­ளி­யலை சரிப்­ப­டுத்த தலைகீழ் சீர்திருத்தங்கள் தேவை என்­பதை ஏற்­றுக்கொள்­கி­றார்­கள்.

இதற்கு அனைத்­து­லக பண நிதி­யத்தின் ஆத­ரவுடன் கூடிய பரந்த அள­வி­லான பொரு­ளி­யல் செயல்­திட்­டங்­கள் தேவை.

இருந்­தா­லும் அத்­த­கைய எந்த ஒரு­திட்­ட­மும் ஏற்­றுக்கொள்­ளப்­பட வேண்­டு­மா­னால் அதற்கு இரண்டு நிபந்­த­னை­களை நிறை­வேற்­றி­யாக வேண்­டும். ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய திட்­டங்­களை நிறை­வேற்ற இலங்­கைக்கு நிலை­யான அர­சாங்­கம் தேவை.

இரண்­டா­வது, இலங்கை தனது கடன் அடைப்­புத் திட்­டங்­களை திருத்தி அமைக்க வேண்­டிய தேவை இருக்­கும். இந்நிபந்தனை­களை நிறை­வேற்­றி­னால்­தான் அனைத்துலக பண நிதியத்தின் ஆத­ரவு கிடைக்­கும்.

இந்த இரு நிபந்­த­னை­க­ளை­யும் நிறை­வேற்­று­வ­தற்கு காலம் பிடிக்­கும்­போல் தெரி­கிறது. இப்­போ­தைக்குப் பார்க்­கை­யில், எதிர்­கால அர­சாங்­கம் எப்­படி இருக்­கும் என்­பது தெரி­ய­வில்லை.

கடன் கொடுப்­போ­ரு­டன் இடம்­பெ­றக்­கூ­டிய பேச்­சு­வார்த்­தை­களும் இழு­ப­றி­யாகவே இருக்­கக்­கூ­டும். இலங்கை தன்­கடன் அடைப்­புத் திட்­டத்தை ஆகஸ்ட் முடி­வில் பண நிதி­யத்­தி­டம் தாக்­கல் செய்­ய­லாம் என்று நம்­பு­கிறது.

நிபந்­த­னை­கள் நிறை­வேற்­றப்­படும் பட்­சத்­தில் இலங்­கைக்கு உத­வக்­கூ­டிய ஒரு செயல்­திட்­டத்­தை­யும் நிதி ஆத­ர­வை­யும் அனைத்­து­லக பண நிதி­யம் அங்­கீ­க­ரிக்­கும் என்­ப­தற்கு நல்ல வாய்ப்பு உள்­ளது.

அமெ­ரிக்கா, ஐரோப்­பிய நாடு­கள், ஜப்­பான், சீனா, இந்­தியா உள்­ளிட்ட இலங்கைக்கு முக்­கி­ய­மான நாடு­கள் அதற்கு ஆத­ர­வாக செயல்­படும் என்று நம்­ப­லாம். இதற்­கெல்­லாம் எப்­ப­டி­யும் செப்­டம்­பர் ஆகி­வி­டும் என்று தெரி­கிறது.

இதற்­கி­டையே, இலங்கை குறு­கிய கால உத­வி­க­ளைச் சார்ந்­தி­ருக்க வேண்­டிய நிலை இருக்­கிறது. இந்­தியா ஏற்­கெ­னவே இலங்­கைக்கு கணி­ச­மான அள­வுக்கு உதவி இருக்­கிறது.

அவ­சர உத­வி­யாக ஏறக்­கு­றைய US$3.8 பில்­லி­யன் தொகையை இலங்­கைக்கு கொடுக்­கப்­போ­வ­தாக இந்­தியா ஏற்­கெனவே உறுதி கூறி இருக்­கிறது. அதோடு மட்­டு­மின்றி, எரி­பொ­ருள் இறக்­கு­ம­திக்­காக தனி­யாக US$500 மில்­லி­யன் தொகையை இலங்கை இந்­தி­யா­வி­டம் கேட்­கிறது. மேலும் இந்தி­யா­வி­டம் இருந்து US$1 பில்­லி­யன் கடனை இலங்கை கேட்­கிறது.

அனைத்­து­லக பண நிதி­யத்­து­டன் உடன்­பாடு ஏற்­பட்ட பிறகு இந்­தியா, சீனா, ஜப்­பான் நாடு­கள் கூட்­டாக தனக்கு உதவ வேண்­டும் என்று கோரிக்கை விடுத்து அதன்­ தொ­டர்­பில் இலங்கை பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கிறது.

அனைத்­து­லக பண நிதி­யத்­து­டன் 2016 முதல் 2019 வரை இலங்கை ஒரு செயல்­திட்ட உடன்­பாட்­டில் கையெ­ழுத்­திட்டது.

ஆனால் 2017ல் ஏற்­பட்ட பஞ்­சம், 2018ல் ஏற்­பட்ட அர­சி­யல் நெருக்­கடி, 2019 பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல் போன்ற கார­ணங்­க­ளால் அந்­தத் திட்­டத்தை முற்­றி­லும் நடை­முறைப்­படுத்த முடி­ய­வில்லை.

அனைத்­து­லக பண நிதி­யத்­தின் அதி­வேக நிதி­யு­தவி திட்­டத்­தின்­கீழ், இலங்கை மேலும் ஆத­ர­வைப் பெறும் வாய்ப்­பும் இருக்­கிறது. இருந்தாலும் இத்­த­கைய ஒரு வாய்ப்பை இலங்கை பயன்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டு­மா­னால் நாடு மூன்று அல்­லது நான்கு ஆண்­டு­க­ளுக்­குள் பரந்த அள­வி­லான தீவிர சீர்­தி­ருத்­தங்­களை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டி இருக்­கும்.

இலங்கை எதிர்­நோக்­கும் முன்­னு­ரி­மை­களில் வரி சீர்­தி­ருத்­தம் முக்­கி­ய­மா­னது. இலங்கை முன்னர் வரு­மான வரி­யை­யும் வாட் வரி­யை­யை­யும் குறைத்­தது.

செல­வி­னங்­களை மிக­வும் கவ­னமாக நிர்­வ­கிக்க வேண்­டும். எரி­பொ­ருள், இதர மானி­யங்­களை குறைக்க வேண்டி இருக்­கும். பொது கடன்­கள், கடன் வசதி­கள் போன்­ற­வற்­றுக்கு வரம்பு விதிப்­பது போன்ற கடு­மை­யான நிதித் துறை விதி­மு­றை­களை அமல்­ப­டுத்த வேண்டி இருக்­கும்.

சமூ­கப் பாது­காப்பு ஏற்­பா­டு­களை விரிவுப­டுத்­துவதற்கான வாய்ப்பு இருக்­கிறது. வரி உயர்வு, மானி­யம் குறைப்பு, கடுமையான நிதித்­துறை விதி­மு­றை­கள் போன்ற இத்­த­கைய சீர­மைப்­பு­கள் கொஞ்ச காலத்­திற்­கா­வது மிக­வும் சிர­ம­மா­ன­தாகவே இருக்­கும்.

இலங்கை பொரு­ளி­யலை மீண்­டும் வளர்ச்சிப் பாதைக்குத் திருப்பு­வது என்பது நீண்­ட­நெ­டுங்­கால கடும் முயற்சி­யா­கவே இருக்­கும்.

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2018ஆம் ஆண்டு இருந்த அளவுக்கு 2026ல் தான் திரும்பக்கூடும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

இலங்கையில் ராஜபக்சே யுகம் முடிவுக்கு வந்திருக்கிறது. பொருளியல் பிரச்சினைகளின் ஆழத்தை நன்கு புரிந்துகொண்டு அந்தப் பிரச்சினை களைக் களைவதற்கான தேவை இருக் கிறது என்பதை ஒப்புக்கொண்டு செயல் பட்டால்தான் இலங்கை படுமோசமான நிலையில் இருந்து விடுபட்டு மீண்டு தலைதூக்கும்.

விக்ரம் கன்னா

இணை ஆசிரியர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்