சிங்கப்பூரில் வசிக்கும் இன, சமய குழுக்களுக்கு இடையில் புரிந்துணர்வைப் பேணி வளர்ப்பதும் நல்லுறவுப் பாலங்களைப் பலப்படுத்துவதும் சிங்கப்பூரின் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்கு உயிர்நாடியானவை என்று உள்துறை துணை அமைச்சர் முகம்மது ஃபைசல் இப்ராஹிம் தெரிவித்தார்.
பயங்கரவாத மிரட்டலை அரசாங்கம் மட்டும் சமாளித்துவிட இயலாது என்றார் அவர்.
அமைப்புகளுக்கு இடைப்பட்ட பின்நலப் பராமரிப்புக் குழுமம், சமய மறுவாழ்வுக் குழுமம் ஆகியவற்றுடன் சேர்ந்து தாமான் பக்கான் ஏற்பாடு செய்த பயங்கரவாத எதிர்ப்பு நிகழ்ச்சி ஒன்றில் அவர் உரையாற்றினார்.

