வானூர்தியைப் பறக்கவிட அனுமதி தேவையில்லை

வானூர்தியைப் பறக்கவிட அனுமதி தேவையில்லை

2 mins read
ca83f90a-af27-43ee-9388-9ede10da1b4b
பாண்டான் நீர்த்தேகத்தில் வானூர்தியைப் பறக்கவிடும் பிரத்தியேகப் பகுதியின் தொடக்க நிகழ்ச்சியில் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபூ மீ ஹார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பாண்டான் நீர்த்தேக்கத்தில் உள்ள பிரத்தியேகப் பகுதியில் பொழுதுபோக்கிற்காக பறக்கவிடலாம்

ஆளில்லா வானூர்­தி­க­ளைப் பொழுது­போக்­கிற்­காக பறக்­க­வி­டு­வோர், இனி அதற்­கான உரி­மத்­திற்கு விண்­ணப்­பிக்­கத் தேவை­யில்லை. பாண்­டான் நீர்த்­தேக்­கத்­தில் உள்ள பிரத்­தி­யே­கப் பகு­தி­யில் வானூர்­தி­களைப் பறக்­க­வி­ட­லாம்.

16 ஹெக்­டர் பரப்­ப­ள­வி­லான இந்­தப் பகுதி, வானூர்­தி­க­ளைப் பறக்­க­வி­டு­வோ­ரின் தேவை­க­ளைப் பூர்த்­தி­செய்­யும் அதே வேளை­யில், பொது­மக்­க­ளின் பாது­காப்பை உறுதி­செய்­யும் என்று போக்­கு­வரத்து அமைச்­சர் எஸ்.ஈஸ்­வ­ரன் நேற்று தெரி­வித்­தார்.

"பொழு­து­போக்­கிற்­காக ஆளில்லா வானூர்­தி­க­ளைப் பறக்­க­வி­டு­வோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வதை நாங்­கள் காண்­கி­றோம்," என்று சொன்ன அவர், சிங்­கப்­பூ­ரில் பதி­வு­செய்­யப்­பட்ட வானூர்­தி­க­ளின் எண்­ணிக்கை நான்கு மடங்கு அதி­க­ரித்து இருப்­பதைச் சுட்­டி­னார்.

பாண்­டான் நீர்த்­தேக்­கத்­தில் உள்ள இந்­தப் பிரத்­தி­யே­கப் பகுதி­யில் வானூர்­தி­க­ளைப் பறக்­க­விடும்­போது, சிங்­கப்­பூர் சிவில் விமானப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் நிர்­ண­யித்­துள்ள விதி­மு­றை­களுக்கு உட்பட்டு பய­னா­ளர்­கள் நடக்க வேண்டும்.

கடல்­மட்­டத்­தில் இருந்து 60 மீட்­டர் உய­ரத்­திற்கு மேலே வானூர்­தி­க­ளைப் பறக்­க­வி­டக்­கூ­டாது. மேலும், 250 கிரா­முக்கு மேல் எடை­யு­டைய வானூர்­தி­யைப் பறக்­க­விடு­வ­தற்கு முன்பு, சிவில் விமானப் போக்­கு­வ­ரத்து ஆணை­யத்­தி­டம் அதைப் பதி­வு­செய்ய வேண்­டும்.

25 கிலோ­கி­ரா­முக்கு மேல் எடை­யு­டைய வானூர்­தி­யைப் பறக்­க­விடு­வோ­ரும் பொழு­து­போக்கு தவிர்த்து மற்ற கார­ணங்­க­ளுக்­காக வானூர்தியைப் பறக்­க­வி­டு­வோரும் அதற்கான அனு­ம­தி­யைப் பெற வேண்டும்.

பாண்­டான் நீர்த்­தேக்­கத்­தில் வானூர்­தி­க­ளைப் பறக்க விடு­வ­தற்­கான எல்­லை­யைச் சுற்றி மஞ்­சள் மித­வை­கள் உள்­ளன. மேலும், அரு­கி­லுள்ள வீட­மைப்பு புளோக்­கு­களில் இருந்து இந்­தப் பகுதி குறைந்­தது 400 மீட்­டர் தூரத்­தில் உள்­ளது.

அன்­றா­டம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நீர்த்­தேக்­கத்­தில் வானூர்­தி­க­ளைப் பறக்­க­வி­ட­லாம்.

வானூர்­தி­க­ளைப் பறக்­க­வி­டு­வதன் தொடர்­பி­லான தக­வல்­களை உட­னுக்­கு­டன் பெற, டெலி­கி­ராம் செய­லி­யில் உள்ள உரை­யாடல் குழு ஒன்­றில் பொது­மக்­க­ளுக்கு சேர­லாம்.

ஆளில்லா வானூர்தி சமூ­கம் மற்­றும் இப்­ப­கு­திக்கு அரு­கில் வசிக்­கும் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளி­டம் இருந்து சேக­ரிக்­கப்­படும் கருத்­து­கள் ஆரா­யப்­படும் என்று திரு ஈஸ்­வ­ரன் சொன்­னார்.