காற்பந்துத் திடலுக்குள் அத்துமீறி நுழைந்த இருவர்; காவல்துறை விசாரணை

காற்பந்துத் திடலுக்குள் அத்துமீறி நுழைந்த இருவர்; காவல்துறை விசாரணை

1 mins read
d4d65786-5f3a-449b-b141-67e9f9d20199
-

தேசிய விளை­யாட்­ட­ரங்­கில் லிவர்பூல், கிறிஸ்­டல் பேலஸ் காற்­பந்துக் குழுக்­க­ளுக்கு இடையே நேற்று முன்­தி­னம் இரவு நடை­பெற்ற ஆட்­டத்­திற்­குப் பிறகு தடுப்பு­வே­லி­யைத் தாண்டி காற்­பந்­துத் திட­லுக்­குள் நுழைந்த ஆட­வர்­ இரு­வர், காவல்­துறை விசா­ர­ணைக்கு உதவி வரு­கின்­ற­னர்.

இந்த ஆட்டத்தைக் காண விளையாட்டரங்கிற்கு 50,217 ரசிகர்கள் வந்திருந்தனர்.

தேசிய விளை­யாட்­ட­ரங்­கில் உதவி கோரி நேற்று முன்­தி­னம் இரவு 11.19 மணிக்கு காவல்­துறைக்கு அழைப்பு வந்­த­தாக பேச்­சா­ளர் ஒரு­வர் குறிப்­பிட்­டார்.

"காற்­பந்­துத் திட­லுக்­குள் அத்து­மீறி நுழைந்­த­தாக 17, 41 வயது­டைய ஆட­வர்­ இரு­வர் விசா­ரணைக்கு உதவி வரு­கின்­ற­னர்," என்று அவர் சொன்­னார்.

ஆட்­டம் முடிந்த பிறகு, காற்­பந்­துத் திட­லின் ஓரத்­திற்கு வந்து லிவர்­பூல் ஆட்­டக்­கா­ரர்­கள் தங்­கள் ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு நன்றி தெரி­வித்­த­னர். அப்­போது லிவர்பூல் சீருடை அணிந்­தி­ருந்த ஆட­வர் இரு­வர், காற்­பந்­துத் திடலைச் சுற்­றி­யுள்ள விளம்­ப­ரப் பல­கை­யைத் தாண்டி திட­லுக்­குள் அடுத்­த­டுத்து நுழைந்­த­னர்.

லிவர்­பூல் ஆட்­டக்­கா­ரர்­க­ளைக் கடந்து ஓடிய முத­லா­ம­வ­ரைப் பிடிக்க பாது­கா­வல் அதி­கா­ரி­கள் முத­லில் மேற்­கொண்ட முயற்சி கைகூ­ட­வில்லை. திட­லைச் சுற்றி ஓடிய அவரை ஒரு­வழியாக அதி­கா­ரி­கள் தடுத்து நிறுத்­தி­னர்.

திட­லுக்­குள் நுழைய முயன்ற இரண்­டா­ம­வர், விளம்­ப­ரப் பல­கை­யைத் தாண்­டி­ய­போது அவ­ரது கால் தடுக்­கி­யது. லிவர்­பூல் ஆட்­டக்­கா­ரர்­கள் மற்­றும் அவர்­க­ளு­டைய நிர்­வாகி யர்­கன் கிளோப்­பிற்கு முன்­னால் அவர் விழுந்­தார்.

எழுந்த நின்ற அவரை பாது­கா­வல் அதி­கா­ரி­கள் மடக்­கிப் பிடித்­த­னர்.