சிங்கப்பூரில் மின்சாரக் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும்.
ரஷ்யாவிலிருந்து ஜெர்மனிக்கு இயற்கை எரிவாயுயைக் கொண்டு செல்லும் முக்கிய எரிவாயுக் குழாயின் செயல்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. நார்ட் ஸ்ட்ரீம் 1 எனும் எரிவாயுக் குழாய் பராமரிப்புக்காக ஜூலை 11 முதல் 21ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது.
ஆனால் அதன் பின்னரும் ரஷ்ய அதிபர் புட்டின் குழாயைக் கால வரையறை இன்றி நிறுத்தி வைக்கலாம் என்றும் இதனால் ஐரோப்பாவில் இயற்கை எரிவாயு பற்றாக்குறை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
இதனால் திரவ இயற்கை எரிவாயுவின் உலகளாவிய விலை ஒரு வாரமாக வேகமாக உயர்ந்து வருகிறது. விலை உயர்வு நீண்ட காலம் நீடிக்கலாம் என்று கருதப்படுகிறது.
இயற்கை எரிவாயு பற்றாக்குறை நீடித்தால் சிங்கப்பூர் அதற்காக கடுமையாகப் போட்டியிட வேண்டிருக்கும். இதனால் மின்சாரக் கட்டணங்கள் அதிகமாகக் கூடும் என்று கவனிப்பாளர்கள் கூறினர்.

