ஏஆர்டி சோதனைக் கருவிகள் விநியோகம் தொடங்கியது

ஏஆர்டி சோதனைக் கருவிகள் விநியோகம் தொடங்கியது

2 mins read
90257375-ce17-4a23-9b40-6bf3eaf3f5e9
சிங்கப்பூரில் உள்ள 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட வீடுகளின் அஞ்சல்பெட்டிகளில் ஏஆர்டி பரிசோதனைக் கருவிகள் வைக்கப்படும். சிங்போஸ்ட் அதை விநியோகிக்கும். ஏஆர்டி பரிசோதனைக் கருவி வந்து சேர்ந்துள்ளதா என்பதை சிங்போஸ்ட்டின் கைபேசி செயலியில் சரிபார்க்கலாம் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் நேற்று ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.படம்: ஃபேஸ்புக்/ஓங் யீ காங் -

சிங்­கப்­பூ­ரில் உள்ள 1.5 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான வீடு­கள், தலா பத்து ஏஆர்டி விரை­வுப் பரி­சோ­த­னைக் கரு­வி­க­ளைப் பெற­வுள்­ளன. ஏஆர்டி பரி­சோ­த­னைக் கரு­வி­க­ளின் விநி­யோ­கம் நேற்று தொடங்­கி­யது.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 அலை மீண்­டும் ஏற்­பட்­டி­ருக்­கும் சூழ­லில் அர­சாங்­கம் மூன்­றா­வது முறை­யாக பரி­சோ­த­னைக் கரு­வி­களை அர­சாங்­கம் இல­வ­ச­மாக வழங்கி வரு­கிறது.

ஏஆர்டி பரி­சோ­த­னைக் கரு­வி­ க­ளின் விநி­யோ­கம் தொடங்­கி­யி­ருப்­பதை சுகா­தார அமைச்­சர் ஓங் யீ காங் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேற்று தெரி­வித்­தார்.

பரி­சோ­த­னைக் கரு­வி­கள் மூன்­றாம் முறை­யாக விநி­யோ­கிக்­கப்­படும் என்று துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் கடந்த மாதம் அறி­வித்­தி­ருந்­தார். ஏரா­ள­மான வீடு­க­ளுக்கு விநி­யோ­கிக்க வேண்­டி­யுள்­ள­தால் சில குடும்­பங்­கள் சில வாரம் கழித்­து­தான் ஏர்ஆர்டி பரி­சோ­த­னைக் கருவி களைப் பெறக்­கூ­டும் என்று சுகா­தார அமைச்சு கடந்த வாரம் கூறி­யது.

தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேற்று இது குறித்து பதி­விட்ட திரு ஓங், "சுய­ப­ரி­சோ­தனை நம் வாழ்­வில் அங்­க­மா­கி­விட்­டது. தேவைப்­பட்­டால் பரி­சோ­தனை செய்­து­கொள்­ளுங்­கள்," என்று அறி­வு­றுத்­தி­னார். முதி­ய­வர்­க­ளை­யும் நோய் அபா­யம் உள்­ள­வர்­க­ளை­யும் சந்­திக்­கச் செல்­லும் முன்­னர் பரி­சோ­தனை செய்து கொள்­ளும்­படி அவர் கூறி­னார்.

சளி, தொண்டை வலி, காய்ச்­சல் போன்ற மூச்­சுப் பிரச்­சினை தொடர்­பான அறி­கு­றி­கள் உள்­ள­வர்­களை தின­மும் பரி­சோ­தனை செய்­து­கொள்­ளும்­படி சுகா­தார அமைச்­சர் கேட்­டுக்­கொண்­டார்.

நோய் அறி­கு­றி­கள் தொடங்­கிய சில நாள்­க­ளுக்­குப் பின்­னரே கொவிட்-19 தொற்று உள்­ளதா என்று பரி­சோ­தனை காட்­டும்.

தற்­போ­தைய அலை­யைச் சமா­ளிக்க சமூ­கப் பொறுப்­பு­டன் நடந்து கொள்­வது மிக முக்­கி­யம் என்று திரு ஓங் கூறி­னார்.