நியூட்டன் வட்டாரத்தில் அமைந்திருக்கும் 'டிபிஎஸ்' வங்கியின் முதல் பசுமைக் கட்டடம் (படம்) நேற்று முதல் அதிகாரபூர்வமாகச் செயல்படத் தொடங்கியுள்ளது.
சிங்கப்பூரில் இத்தகைய வங்கிக் கட்டடம் அமைவது இதுவே முதல்முறை.
முப்பதாண்டு பழமையான இந்த நான்கு மாடிக் கட்டடத்தின் மேற்கூரையில் ஏறக்குறைய ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் சூரியசக்தித் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.
இவற்றில் இருந்து பெறப்படும் மின்சாரத்தில் இயங்கும் குளிர்சாதனக் கட்டமைப்பு, விளக்குக் கம்பங்கள் உள்ளிட்டவற்றுடன் குளிர்ச்சியைத் தரும் வகையில் கட்டடத்தின் வெளிப்புறம் மூங்கில் கம்பங்களால் அமைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் 'நெட் ஸீரோ' என வகைப்படுத்தப்படும் இத்தகைய கட்டடம் தயாரிக்கும் மின்சாரத்தின் அளவே பயன்பாடும் இருக்கும்.

