செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
d57e9f2d-fd93-4b48-850e-3c9036672a3e
-

10 கிலோ மீட்டர் நீள எம்ஆர்டி

பாதையில் இரைச்சல் தடுப்புகள்

வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு ரயில்பாதைகளில் 27 கிலோமீட்டருக்கு இரைச்சல் தடுப்புக் கட்டமைப்பை நிறுவும் பணிகளின் இரண்டாம் கட்டம் (10 கி.மீ.) நிறைவுபெற்றுள்ளது.

அங் மோ கியோ, புக்கிட் பாத்தோக், போன விஸ்தா உள்ளிட்ட 20 இடங்களில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு இதனால் ரயில்கள் கடக்கும்போது ஏற்படும் இரைச்சல் குறையும்.

இதுவரை மொத்தம் 21.5 கிலோமீட்டர் தொலைவிற்கு இரைச்சல் தடுப்புகள் பொருத்தப்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. எஞ்சிய 5.5 கிமீ தொலைவுக்கு இந்தக் கட்டமைப்பை அமைக்கும் பணி 2024 இறுதிக்குள் நிறைவடையும்.

துன்புறுத்தலுக்கு ஆளான மாணவி; அறிவியல் பாடம், தேர்வு மாற்றம்

ஒன்­பது அல்­லது பத்து வய­தாக இருந்­த­போது குடும்ப நண்­ப­ரால் பாலி­யல் துன்­பு­றுத்­த­லுக்கு ஆளான சிறுமி கடு­மை­யான மனச் சிக்­கலை எதிர்­நோக்­கி­னார்.

தற்­போது 17 வய­தா­கும் இவர், 2015ல் நடந்த துன்­பு­றுத்­தல் சம்­ப­வங்­க­ளைத் தொடர்ந்து ஏற்­பட்ட அதிர்ச்சி, மன அழுத்­தம் ஆகி­ய­வற்­றால் இன்­னும் சிர­மப்­ப­டு­வ­தாக உயர் நீதி­மன்­றத்­தில் நேற்று தெரி­விக்­கப்­பட்­டது.

இதில் தொடர்­பு­டைய 60 வயது ஆட­வர் தன் மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்டை ஒப்­புக்­கொண்­டார்.

இவ­ருக்கு 11 ஆண்­டுச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது. தண்­டனை விதிக்­கும்­போது மேலும் ஐந்து குற்­றச்­சாட்­டு­களும் கவனத்தில் கொள்­ளப்­பட்­டன. பாதிக்­கப்­பட்ட சிறு­மி­யின் பெற்­றோர் மண­வி­லக்கு பெற்­ற­தால், தாய்­வ­ழிப் பாட்­டி­யு­டன் வசித்த காலத்தில் ஆடவர் அவரைத் துன்புறுத்தினார்.

உயர்­நி­லைப் பள்ளி முத­லாம் ஆண்­டில் பாலி­யல் கல்வி வகுப்­பில் பாலி­யல் துன்­பு­றுத்­தல் குறித்து கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­போது மனம் உடைந்த சிறுமி ஆசி­ரி­ய­ரி­ட­மும் பள்ளி ஆலோ­ச­க­ரி­ட­மும் தனக்கு நேர்ந்­த­தைப் பகிர்ந்­து­கொண்­டார்.

விவ­ரம் தந்­தைக்­குத் தெரி­விக்­கப்­ப­டவே அவர் காவல்­து­றை­யி­டம் புகா­ர­ளித்­தார். சிறு­மி­யின் மன­நி­லை­யைக் கருத்­தில்­கொண்டு மனித இனப்­பெ­ருக்­கம் தொடர்­பான பாட வகுப்­பு­க­ளைத் தவிர்க்­க­வும் இவ­ருக்­காக அறி­வி­யல் தேர்­வுத்­தாளை மாற்­றி­ய­மைக்­க­வும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.