கிருமித் தொற்றால் 4 வயது சிறுமி மரணம்

சிங்கப்பூரில் நான்கு வயது சிறுமி ஒருவர் கொவிட்-19 கிருமித் தொற்றால் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கிருமித் தொற்றால் 12 வயதுக்குக் கீழ் உள்ளவர் மாண்டிருப்பது இது இரண்டாவது முறை.

சிறுமியின் மரணத்துக்கு நிமோனியா காய்ச்சல் காரணம் என அமைச்சு கூறியது. சிறுமிக்கு மற்ற எந்தவொரு மருத்துவ பிரச்சினை இல்லையென்றும் குறிப்பிடப்பட்டது.

ஜூலை 15 அன்று சிறுமிக்கு காய்ச்சலும், மூச்சு பிரச்சினையும் ஏற்பட்டது. ஏஆர்டி பரிசோதனை செய்ததில் சிறுமிக்கு கிருமித்தொற்று இருப்பது தெரியவந்தது. மருந்து உட்கொண்டும், அவரது உடல்நிலை மேம்படவில்லை. அன்று இரவு சிறுமி மயங்கி விழுந்ததாகக் கூறப்பட்டது.

கிருமித் தொற்றால் ஜூன் 27 அன்று ஒன்­றரை வய­துக் குழந்தை மாண்டது. ‘என்­செ­ஃபா­லி­டிஸ்’ எனப்­படும் மூளை வீக்­கத்­தால் அக்குழந்தை உயி­ரி­ழந்­த­தாக சுகாதார அமைச்சு குறிப்­பிட்­டிருந்தது. இந்த குழந்தைக்கும் மருத்துவ பிரச்சினை ஏதும் இல்லை எனக் கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!