சிங்கப்பூரில் ஆடம்பரப் பொருள்களை விநியோகிக்காமல் ஏமாற்றியதாக ஒரு தம்பதி (படம்) மீது சென்ற மாதம் முதல் 180 புகார்கள் வந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
குறைந்தபட்சம் $32 மில்லியன் பெறுமான பொருள்களை இந்தத் தம்பதி விநியோகிக்கவில்லை என்றும் இந்தப் பொருள்களில் பொரும்பாலானவை கைக்கடிகாரங்கள் என்றும் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' அறிகிறது. டிரேட்னேஷன், டிரேட்லக்சுரி ஆகிய இரு நிறுவனங்
களுக்கு எதிராக புகார்கள் வரப்பெற்றதாக காவல்துறை கூறி யது.
ஆடம்பர கைக்கடிகாரம் மற்றும் கைப்பைகளை விநியோகிக்க இந்த நிறுவனங்களிடம் முன்தொகை செலுத்தப்பட்டதாகவும் ஆனால் பொருள்கள் விநியோகிக்கப்படவில்லை என்றும் புகார்களில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவம் தொடர்பில், சென்ற மாதம் 27ஆம் தேதி 26 வயது சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரது கடப்பிதழ் முடக்கப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டார். அவரது மனைவியான 27 வயதுப் பெண் விசாரணைக்கு உதவிவந்தார். பின்னர் இருவரும் மாயமாகிவிட்டனர். அப்பெண் தாய்லாந்து வாசி என நம்பப்படுகிறது.
இருவருக்கும் எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
'இண்டர்போல்' எனப்படும் அனைத்துலகக் காவல்துறையும் இவர்களைத் தேடும் முயற்சியாக 'ரெட் அலர்ட்' விடுத்துள்ளது. இந்தத் தம்பதி இம்மாதம் 4ஆம் தேதி தப்பிச் செல்ல உதவியதாக 40 வயது மலேசிய ஆடவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

