அழகு நிலையங்கள் மற்றும் நல்வாழ்வு நிலையங்கள் மூடப்பட்டதால் பயனீட்டார்களுக்கு வழங்கப்படக்
கூடிய $169,000 காப்புறுதித்தொகை கேட்பாரற்று இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பயனாளர்
களான 580 பயனீட்டாளர்களைத் தொடர்புகொள்ள இயலவில்லை அல்லது பதிலளிக்க முன்வரவில்லை. கேஸ் எனப்படும் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்தின் ஓர் அங்கமான 'கேஸ்டிரஸ்ட்' அமைப்பு நிறுவன அங்கீகாரத்திற்குப் பொறுப்பு வகிக்கிறது. தனது அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் இடையில் மூடப்பட்டால் அதன் பயனீட்டாளர்கள் முன்கூட்டியே செலுத்திய தொகை பாதிக்கப்படா வண்ணம் அவர்கள் காப்புறுதித் தொகை பெற இது உதவுகிறது. அந்த வகையில், 2017 ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு ஜூன் வரை 28 அழகு நிலையங்கள் மற்றும் நல்வாழ்வு நிலையங்கள் மூடப்பட்டதால் அவற்றின் பயனீட்
டாளர்களுக்குக் காப்புறுதித் தொகை வழங்க கேஸ்டிரஸ்ட் ஏற்பாடு செய்தது. 2017ஆம் ஆண்டு முதல், பாதிக்கப்பட்ட 512 பயனீட்டாளர்களுக்கு இந்த அமைப்பு $280,000 தொகை பெற உதவியது.

