பொதுச் சேவைப் பிரிவு நீடித்த நிலைத்தன்மைக்காக புதிய உபகாரசம்பளங்களை வழங்கவுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் முதல் அவற்றுக்கு விண்ணப்பிக்கலாம்.
உபகாரச் சம்பளம் பெறுவோருக்கு அரசாங்கத்தின் நீடித்த நிலைத்தன்மை கொள்கை வகுத்தல், அது சார்ந்த நடவடிக்கைகள ஆகியவற்றில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும். பொதுச் சேவை பிரிவு நேற்று அதைத் தெரிவித்தது.
புதிய உபகாரச்சம்பளம் பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் சிங்கப்பூரின் ஆற்றலை மேம்படுத்த உதவும் என்று கல்வி அமைச்சரும் அரசாங்கச் சேவைப் பிரிவுக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு சான் சுன் சிங் தெரிவித்தார். பொதுச் சேவை ஆணையத்தின் உபகாரச்சம்பங்களை வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
சிங்கப்பூர் போன்ற நகர நாடு களுக்கு பருவநிலை மாற்றம் பெரிய அச்சுறுத்தல் என்று திரு சான் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் மொத்தம் 66 மாணவர்களுக்கு உபகாரச்சம்பளங்கள் வழங்கப்பட்டன. அவர்கள் சிங்கப்பூரிலும் வெளிநாடுகளிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் பட்டபடிப்பைப் பயிலவுள்ளனர்.

