கொவிட்-19 கொள்ளைநோய் சமாளிப்பு செலவினங்களில் மூன்று அரசாங்க அமைப்புகள் இன்னும் அதிகமாகக் கவனம் செலுத்தி
யிருக்கலாம் என தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகம் (ஏஜிஓ) தெரிவித்துள்ளது.
சுகாதார மேம்பாட்டு வாரியம், மனிதவள அமைச்சு மற்றும் சிங்கப்பூர் நில ஆணையம் ஆகியன அந்த மூன்று அமைப்புகள் என்றும் அது நேற்று வெளியிட்ட ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவசரமான சூழ்நிலையின்போது உரிய நேரத்தில் பல்வேறு சிறந்த நடைமுறைகளை இவை அமல்படுத்தியதாகவும் அரசாங்கச் செலவுகளைக் குறைக்க முயன்ற தாகவும் ஏஜிஓ தெரிவித்துள்ளது.
கட்டுப்பாடுகள் என்று வரும்போது அந்த அமைப்புகள் இன்னும் அவற்றை நன்றாகச் செய்திருக்கலாம் என்று அறிக்கை கூறியது.
2020 ஜனவரி முதல் கடந்த ஆண்டு மார்ச் வரை மூன்று அரசாங்க அமைப்புகளும் $1.51 பில்லியன் செலவு செய்தன. மனித வளச் சேவைகள், தங்குமிட வசதிகள், உணவு விநியோகம் போன்றவற்றுக்காக இத்தொகை செல
விடப்பட்டது.
மொத்த கொவிட்-19 தொடர்பான செலவுகளில் 18 விழுக்காட்டின் மீது மாதிரி தணிக்கையை ஏஜிஓ மேற்கொண்டது.
குத்தகையாளர்களின் யோசனைகளை மதிப்பீடு செய்ததிலும் விலைகள் நியாயமானவையாக இருக்கின்றனவா என்பதை தீர்மானிக்கும் விதத்திலும் குறைபாடுகள் இருந்ததை அப்போது அது கண்டறிந்தது.
மேலும், குத்தகை ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டவற்றில் முரண் பாடுகளும் விடுபடல்களும் இருந்ததும் தெரியவந்தது.
இவற்றின் அடிப்படையில், ஆவணப்படுத்தலிலும் மதிப்பீடு செய்வதிலும் மேம்பாடு தேவைப்படுவதாக ஏஜிஓ குறிப்பிட்டு உள்ளது.
அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, மூன்று அரசாங்க அமைப்புகளும் சில நிறுவனங்களுக்கு எதிராகக் காவல்துறையில் புகார் அளித்து உள்ளன.
ஏலக்குத்தகையைப் பெற ஒழுங்கற்ற விலை மதிப்பீடுகளை அவை சமர்ப்பித்து இருந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் சில ஏலக்குத்தகைகளுக்கு சோதனைகள் நிறைவேற்றப்பட்டு பொது நிதியைப் பயன்படுத்தி ஏலக்குத்தகையை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவை குறிப்பிட்டுள்ளன.
3 அரசு அமைப்புகளின் கொவிட்-19 செலவினம் தொடர்பாக ஏஜிஓ அறிக்கை

