11வது மாடி சன்னல் வழியே தப்ப முயன்ற கர்ப்பிணி

11வது மாடி சன்னல் வழியே தப்ப முயன்ற கர்ப்பிணி

1 mins read
a9bd242b-e3c2-47d5-9e5d-fc846c0b0692
மீட்கப்பட்ட பெண் உடனடியாக மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டார். படம்:சிஎன்பி ஃபேஸ்புக் -

மத்­திய போதைப்­பொ­ருள் தடுப்­புப் பிரிவு (சிஎன்பி) அண்­மைய சம்­ப­வம் ஒன்றை தனது ஃபேஸ் புக் பதி­வில் குறிப்­பிட்டுள்­ளது.

சிஎன்பி அதி­கா­ரி­கள் 11வது மாடி­யிலுள்ள ஒரு வீட்டை சோத­னை­யிடச் சென்றபோது அங்­கிருந்த ஏழு மாத கர்ப்­பிணி ஒரு­வர் சன்­னல் வழி­யாக வெளி­யே­றி­னார். 8வது மாடி­யின் வெளியே குளி­ரூட்டி தாங்­கி­யின் விளிம்­பின் அருகே அந்­தப் பெண் இறங்­கி­யதை அதி­கா­ரி­கள் கண்­ட­னர். உட­ன­டி­யாக மாடிப்­படி வழியே சென்ற அதி­காரி ஒரு­வர், அப் பெண்ணை சமா­தா­னப்­ப­டுத்­தி­னார். தொடர்ந்து, சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்பு படை­யால் அந்­தப் பெண் மீட்­கப்­பட்­டார். கர்ப்­பிணி என்­ப­தால் அவர் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார்.

அவ­ரது உடல்­நி­லையை உறுதி­ செய்த பின்­னர், வீட்­டுக்­குள் அதி­கா­ரி­கள் நுழைந்­த­னர். உள்ளே போதைப்­பொ­ருள்­க­ளின் அருகே ஏழு வயது சிறு­வனை அவர்­கள் கண்­ட­னர். உற­வி­னர்­க­ளிடம் அச்­சி­று­வன் ஒப்­ப­டைக்­கப்­பட்­டான். போதைப் புழங்கி, குழந்தை, அதி­கா­ரி­கள் அனை­வ­ரும் சம்­பந்­தப்­பட்ட மனதை உலுக்­கும் சம்­ப­வம் இது என சிஎன்பி கூறியது.