அரசாங்க ஊழியர்களின் வங்கிக் குறிப்பில் தவறு

அரசாங்க ஊழியர்களின் வங்கிக் குறிப்பில் தவறு

1 mins read
a45897da-49b1-4164-9fd6-cdd4b38d2493
-

அர­சாங்க ஊழி­யர்­கள் சில­ரின் மாதாந்­தர பரி­வர்த்­தனை அறிக்­கை­யில், சம்­ப­ளம் என்­ப­தற்­குப் பதில் வெளி­நாட்­டுப் பணப் பரி­வர்த்­தனை என்று தவ­று­த­லான குறிப்பு இடம்­பெற்­ற­தா­கத் தக­வல்­கள் கூறு­கின்­றன.

இத­னால் மாதச் சம்­ப­ளம் தொடர்­பில் வழங்­கப்­படும் கூடு­தல் வட்டி விகி­தச் சலுகை கிடைக்­காதோ என்று பாதிக்­கப்­பட்ட சிலர் கவலை தெரி­வித்­துள்­ள­னர்.

கல்வி அமைச்சு, கலா­சார, சமூக, இளை­யர்துறை அமைச்சு ஆகி­ய­வற்­றின் ஊழி­யர்­களும் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் அடங்­கு­வர் என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் அறி­கிறது.

வங்­கிப் பரி­வர்த்­த­னைக் குறி­யீட்­டைத் திருத்­து­வது தொடர்­பான பணி­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக அர­சாங்­கச் சேவைப் பிரிவு தெரி­வித்­தது.

சம்­ப­ளம் சரி­யாக நிரப்­பப்­பட்­டி­ருப்­ப­தால் சலுகை குறித்து அதி­கம் கவ­லைப்­ப­ட­வில்லை என்று சில ஊழி­யர்­கள் கூறி­னர்.

இத்­த­கைய சலு­கை­யைப் பெற, பரி­வர்த்­த­னைக் குறிப்­பில் 'சம்­ப­ளம்' என்று குறிப்­பி­டப்­ப­டு­வது அவ­சி­யம். பாதிக்­கப்­பட்­டோ­ரின் சம்­ப­ளத்­துக்கு இச்­ச­லுகை கிடைப்­பது உறு­தி­செய்­யப்­படும் என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்­பு­கொண்ட சில வங்­கி­கள் உறுதி அளித்­தன.