அதிபர் ஹலிமா: பராமரிப்பாளர்களுக்கு ஆதரவு வழங்குவது மிகவும் முக்கியம்

அதிபர் ஹலிமா: பராமரிப்பாளர்களுக்கு ஆதரவு வழங்குவது மிகவும் முக்கியம்

2 mins read
de82d909-013b-4876-9018-76b472dcc4f7
-

பரா­ம­ரிப்­பா­ளர்­க­ளுக்­குக் கூடு­தல் ஆத­ரவு வழங்­கும் வகை­யில் இவ்­வாண்­டின் அதி­பர் சவால் நன்­கொடை திரட்­டின் மூலம் பெறப்­படும் தொகை பயன்­ப­டுத்­தப்­படும்.

பரா­ம­ரிப்­பா­ளர்­க­ளுக்கு உத­வும் சமூக சேவை அமைப்­பு­க­ளின் திட்­டங்­க­ளுக்கு இந்த நிதி வழங்­கப்­படும்.

திரட்டப்படும் நிதி இரண்டு கட்டங்களாக வழங்கப்படும். முதல் 30 விழுக்காடு அடுத்த ஆண்டு ஏப்ரல் 30க்குள் வழங்கப்படும்.

ஏஞ்சியுள்ள 70 விழுக்காடு 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதிக்குள் வழங்கப்படும்.

ரிவர் வேலி சாலை­யில் உள்ள பரா­ம­ரிப்­பா­ளர்­கள் கூட்­டணி அமைப்புக்கு நேற்று சென்ற அதி­பர் ஹலிமா யாக்­கோப், அந்த அமைப்­பின் திட்­டங்­க­ளு­டன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளி­டம் பேசி­னார்.

பரா­ம­ரிப்­பா­ளர்­க­ளுக்கு சமூ­கத்­தில் உரிய அங்­கீ­கா­ரம் கிடைப்­ப­தில்லை என்­றும் அவர்­க­ளுக்கு கூடு­தல் ஆத­ரவு வழங்க வேண்­டும் என்றும் அதி­பர் ஹலிமா தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேற்று பதி­விட்­டார்.

"சமூக ஆத­ர­வுக் கட்­ட­மைப்­பில் பரா­ம­ரிப்பு முக்­கி­ய­மான அம்­சம். பொது­வாக, பரா­ம­ரிக்­கப்­ப­டு­ப­வர்­கள் மீது­தான் நமது கவ­னம் இருக்­கும்.

"ஆனால் தங்­கள் அன்­புக்

­கு­ரி­ய­வர்­க­ளைப் பரா­ம­ரிப்­ப­வர்­க­ளுக்கு ஆத­ர­வும் உத­வி­யும் தேவை.

"பராமரிப்பாளர்களுக்குச் சரியான மனநிலை, திறன்கள், வளங்கள் ஆகியவற்றை ஏற்படுத்தித் தர ஒட்டுமொத்த சமுதாயமும் முயற்சியில் இறங்க வேண்டும். அப்போதுதான் பராமரிப்பாளர்களால் தங்கள் கடமைகளை முறையாகவும் சரியாகவும் நிறைவேற்ற முடியும்," என்று அதிபர் ஹலிமா தெரிவித்தார்.

பராமரிப்பாளர்கள் கூட்டணி அமைப்பு நிறுவப்பட்டதிலிருந்து 7,500க்கும் மேற்பட்ட பராமரிப்பாளர்களுக்கு அது ஆதரவு வழங்கியுள்ளது.

மேலும் அதிகமான பராமரிப்பாளர்களுக்கு உதவ அது இலக்கு கொண்டுள்ளது.

நிதியைப் பெற சமூக சேவை அமைப்புகள் இம்மாதம் 25ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 5 வரை விண்ணப்பிக்கலாம்.