சாங்கி விமான நிலையத்தில் பயணத் தேவை உயர்ந்து வருகிறது நான்காம் முனையம் செப்டம்பரில் திறப்பு

சாங்கி விமான நிலையத்தில் பயணத் தேவை உயர்ந்து வருகிறது நான்காம் முனையம் செப்டம்பரில் திறப்பு

2 mins read
285813aa-98e2-432b-a22d-710fc2d0d52a
செப்டம்பர் 13ஆம் தேதி திறக்கப்படவுள்ள நான்காவது முனையம் ஆண்டுக்கு 16 மில்லியன் பயணிகளுக்கு சேவை அளிக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கும் என்று சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்தது. படம்: சாங்கி விமான நிலையக் குழுமம் -

கடந்த இரண்டு ஆண்­டு­க­ளுக்கு மேல் கொவிட்-19 சூழ­லில் மூடப்­பட்­டி­ருந்த சாங்கி விமான நிலை­யத்­தின் நான்­கா­வது முனை­யம் செப்­டம்­பர் 13ஆம் தேதி மீண்­டும் திறக்­கப்­படும்.

நான்­கா­வது முனை­யம் ஆண்­டுக்கு 16 மில்­லி­யன் பய­ணி­க­ளைக் கையாள வல்­லது. இதைத் திறப்­ப­தால் விமான நிலை­யத்­தின் செயல்­தி­றன் கூடும் என்று சாங்கி விமான நிலை­யக் குழு­மம் நேற்று கூறி­யது.

அடுத்த இரண்டு மாதங்­களில், விமான நிறு­வ­னங்­க­ளு­ட­னும் பல்­வேறு விமான நிலை­யப் பங்­கா­ளி­ க­ளு­ட­னும் சேர்ந்து முனை­யத்­தின் தயார்­நிலை குறித்த சோத­னை­களை நடத்­தப்­போ­வ­தாக சாங்கி விமான நிலை­யக் குழு­மம் குறிப்­பிட்­டது.

நான்­காம் முனை­யம் திறக்­கும்­போது சீராக செயல்­ப­டு­வதை உறுதிசெய்வது இதன் நோக்­கம்.

அத்­து­டன், 16 விமான நிறு­வ­னங்­க­ளின் சேவை­கள் கட்­டங்­கட்­ட­மாக நான்­கா­வது முனை­யத்­துக்கு மாற்­றப்­படும் என்­றும் சாங்கி விமான நிலை­யக் குழு­மம் சொன்­னது.

கேத்தே பசி­ஃபிக், கொரி­யன் ஏர் ஆகி­யவை செப்­டம்­பர் 13ஆம் தேதி­யி­லி­ருந்து நான்­கா­வது முனை­யத்­தில் செயல்­படும். ஏர்­ஏ­ஷியா குழு­மம் செப்­டம்­பர் 15ஆம் தேதி நான்­கா­வது முனை­யத்­துக்கு இடம்­பெ­ய­ரும்.

செப்­டம்­பர் 20ஆம், 22ஆம் தேதி­களில் வேறு சில விமான நிறு­வ­னங்­களும் அக்­டோ­பர் 25ஆம் தேதி ஜெட்ஸ்­டார் நிறு­வ­ன­மும் நான்­கா­வது முனை­யத்­துக்கு மாற்­றப்­படும்.

நான்­கா­வது முனை­யம் திறப்­ ப­தால், விமா­னப் பய­ணங்­கள் மீட்சி கண்டு வரும் சூழ­லில் விமான நிறு­வ­னங்­க­ளின் வர்த்­தக, செயல்­பாட்டுத் தேவை­க­ளுக்கு ஆத­ர­வு அளிக்க முடி­யும் என்று நிறு­வ­னத்­தின் விமான நிலைய நிர்­வா­கத்­தின் துணைத் தலை­வர் டான் லாய் டெக் சொன்­னார்.

ஆண்­டி­று­தி­யில் அதி­க­மான விமா­னப் பய­ணி­களை எதிர்­பார்க்­கும் நிலை­யில், ஊழி­யர் பற்­றாக்­கு­றை­யைச் சமா­ளிக்க, நான்­காம் முனை­யத்­தில் உள்ள இயந்­தி­ர­ம­யம் உத­வும் என்றார் திரு டான்.