சுவா சூ காங்கில் உள்ள பிரபல தாவரப் பண்ணையில் தீ

சுவா சூ காங்கில் உள்ள பிரபல தாவரப் பண்ணையில் தீ

2 mins read
d260454a-859c-4982-98ea-a1bd0ae21d02
தீச்சம்பவத்தால் செடிகள் கருகிப் போனதையும் தாங்கள் வளர்த்த செல்லப் பறவைகள் கூண்டுகளிலேயே மாண்டு போயிருந்ததையும் பார்த்ததாக டெரஸ்கேப்ஸ் பண்ணையின் உரிமையாளர்களில் ஒருவரான திரு சாண்டி சோ கூறினார்.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ்டைம்ஸ் -

சுவா சூ காங் வட்­டா­ரத்­தில் பிர­ப­ல­மாக உள்ள ஒரு தாவ­ரப் பண்­ணை­யில் ஏற்­பட்ட தீயில் அந்த வளாகத்தின் கால் பகுதி அழிக்­கப்­பட்­டது. அங்கு கூண்­டு­களில் வைக்­கப்­பட்­டி­ருந்த 20க்கும் மேற்­பட்ட செல்­லப் பற­வை­கள் இறந்து போயின.

டெராஸ்­கேப்ஸ் தாவ­ரப்­பண்­ணை­யில் தீ மூண்­ட­தாக கடந்த புதன்­கி­ழமை இரவு 7.35 மணி­ய­ள­வில் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படைக்கு தக­வல் கிடைத்­தது.

தீ சுமார் 90 நிமி­டங்­களில் அணைக்­கப்­பட்­ட­தாக குடி­மைத் தற்­காப்­புப் படை அதன் சமூக ஊட­கப் பக்­கத்­தில் பதி­விட்­டது.

20 அடிக்கு 20 அடி பரப்­ப­ளவு உள்ள இடத்­தில் தீ எரிந்­த­தாக அது தெரி­வித்­தது. தீயைக் கட்­டுப்­ப­டுத்த, ஒரு கட்­டத்­தில் ஐந்து அதி­வேக தண்­ணீர் குழாய்­கள் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தா­க­வும் குடி­மைத் தற்­காப்­புப் படை சொன்­னது.

மிக­வும் மாறு­பட்ட செடி­களை விற்­பனை செய்­வ­தற்­காக டெராஸ்­கேப்ஸ் பண்ணை பிர­ப­ல­மாக உள்­ளது. சாடி­யில் வளர்க்­கும் நெப்­பெந்­தஸ் எனப்படும் செடி­கள், ஃபிலோடென்­டி­ரன் போன்­ற­வற்றை அது விற்று வரு­கிறது.

டெராஸ்­கேப்ஸ் பண்­ணையை ஃபேஸ்புக் சமூக ஊட­கத்­தில் 11,000 பேரும் இன்ஸ்­ட­கி­ரா­மில் 19,000க்கும் மேற்­பட்­ட­வர்­க­ளும் பின்தொடர்­கின்­ற­னர். தீச்­சம்­ப­வம் பற்றி சமூக ஊட­கத்­தில் பதி­விட்ட பண்­ணைக்கு பலர் ஆத­ரவு தெரி­வித்­துள்­ள­னர்.

தாவ­ரப்­பண்­ணைக்கு நிதி திரட்ட பல்­வேறு தனி­ந­பர்­களும் அமைப்­பி­ன­ரும் திட்­ட­மிட்டு வரு­கின்­ற­னர். டெராஸ்­கேப்ஸ் பண்­ணை­யின் இரண்டு உரி­மை­யா­ளர்­களில் ஒரு­வ­ரான சாண்டி சோ, 47, புதன்­கி­ழமை இரவு 7 மணிக்கு அங்­கி­ருந்து புறப்­பட்­ட­தா­கக் கூறி­னார். அரை மணி நேரம் கழித்து தீ பற்றி அவருக்கு தக­வல் கிடைத்­தது. உடனே அங்கு விரைந்­த­போ­தும் நள்­ளி­ர­வுக்­குப் பின்­னர்­தான் உள்ளே அனு­ம­திக்­கப்­பட்­டதாக திரு சோ தெரிவித்தார்.