மரணம் விளைவித்த ஓட்டுநருக்கு 15 வாரங்கள் சிறை

மரணம் விளைவித்த ஓட்டுநருக்கு 15 வாரங்கள் சிறை

1 mins read
9a35f8b5-3249-4016-8878-992770fce42d
-

வாகன விபத்­தில் மோட்­டார் சைக்­கி­ளோட்டி ஒரு­வ­ரின் மர­ணத்­திற்­குக் கார­ண­மாக இருந்த வாகன ஓட்­டு­ந­ருக்கு 15 வாரச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. குற்­ற­வா­ளி­யான 34 வயது டியோ காய் ஸியாங்­கிற்கு எட்டு ஆண்டு­க­ளுக்கு வாக­னம் ஓட்ட தடை­யும் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

சம்­ப­வம் ஈசூன் ரிங் ரோட்­டில் 2020ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் நிகழ்ந்­தது. சாலைச் சந்­திப்­பில் வலது புறம் திரும்­பும்­போது டியோ வழி­விட மறுத்ததால் விபத்து நேர்ந்­தது.

பாதிக்­கப்­பட்­ட­வர் 50 வயது மலே­சி­ய­ரான லியோங் சீ கியோங். அவருக்கு மூளை­யில் மோச­மான காயம் ஏற்­பட்­டது. முகம் உள்­ளிட்ட உட­லின் பல்­வேறு பகு­தி­களில் எலும்பு முறி­வும் ஏற்­பட்­டது.

விபத்­து நிகழ்ந்து 12 மணி­நேரத்­திற்­குப் பிறகு அவர் உயிரிழந்தார்.

தனக்கு விதிக்­கப்­பட்ட தண்­ட­னை­க­ளுக்கு எதி­ராக டியோ மேல்­மு­றை­யீடு செய்­யப்போவதாகத் தெரிவிக்கப்பட்டது. சாலை­யைப் பயன்­ப­டுத்­து­வோ­ரின் பாது­காப்­பைக் கருத்­தில்­கொள்­ளா­மல் வாக­னத்தை ஓட்­டி­ய­தன் தொடர்­பில் தன் மீது சுமத்­தப்­பட்ட ஒரு குற்­றச்­சாட்டை டியோ முன்னதாக ஒப்­புக்­கொண்­டார்.