ஆடம்பரப் பொருள் மோசடியை மேற்கொண்டதாகச் சந்தேகிக்கப்படும் இருவரில் ஒருவர் ஏற்கெனவே 2019ஆம் ஆண்டில் தாய்லாந்தில் தேடப்பட்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற செயலுக்குத்தான் தாய்லாந்தைச் சேர்ந்த 27 வயது பன்சுக் சிரிப்பாவா தேடப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
32 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள இந்த மோசடியை மேற்கொண்டதாக சிங்கப்பூரைச் சேர்ந்த 26 வயது ஆடவர் பி ஜியாப்பெங்கும் (படத்தில் இடமிருக்கும் நபர்) சந்தேகிக்கப்படுகிறார்.

