'ரேஸர்' தொடுத்த $9.7 மி. வழக்கின் நீதிமன்ற விசாரணை முன்கூட்டியே நிறைவடைந்தது

'ரேஸர்' தொடுத்த $9.7 மி. வழக்கின் நீதிமன்ற விசாரணை முன்கூட்டியே நிறைவடைந்தது

1 mins read
4a3a00f1-8b7a-467f-a63b-8d97094d79ce
கணினி விளையாட்டுக்குப் பிரபலமான 'ரேஸர்' நிறுவனத்தின் அலுவலகம். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மின் தக­வல் கசி­வின் தொடர்­பில் கணினி விளை­யாட்டு நிறு­வ­ன­மான 'ரேஸர்' தொழில்­நுட்ப நிறு­வனம் ஒன்­றின் மீது குறைந்தது 9.7 மில்லியன் வெள்ளி இழப்பீடு கேட்டு வழக்கு தொடுத்திருந்தது. அந்த வழக்­கின் நீதி­மன்ற விசா­ரணை திட்­ட­மி­டப்­பட்­ட­தை­விட விரை­வி­லேயே நிறைவடைந்தது.

தக­வல் கசி­யக் கார­ண­மாக இருந்த பாது­காப்பு அத்­து­மீ­ற­லுக்­கு தானே பொறுப்பு என்று வழக்கு தொட­ரப்­பட்ட 'கேப்­ஜெ­மினை' நிறு­வ­னத்­தின் முன்­னாள் ஊழி­யர் ஒப்புக்­­கொண்­ட­தால் இந்­நிலை உரு­வானது.

அத­னால் தொழில்­நுட்ப வல்­லுநர்­கள் சாட்­சி­யம் அளிக்­கத் தேவை­யில்லை என்று நீதி­பதி லீ சியூ கின் கூறி­னார். இம்­மா­தம் 29ஆம் தேதி­யன்று அவர்­கள் சாட்­சி­யம் அளிப்­ப­தாக இருந்­தது.

எழுத்து வடி­வில் இறுதி வாதத்தை சமர்ப்பிக்க வழக்கு அடுத்த மாதம் 30 ஆம் தேதிக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.