சிங்கப்பூருக்குக் கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்வதன் மூலம் வெளிநாடுகளுக்குத் தங்களின் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதன் தொடர்பில் இந்தோனீசிய பண்ணை நிறுவனங்கள் பலனடையக்கூடும் எனக் கருதப்படுகிறது. அந்நிறுவனங்கள் தங்கள் செயல்பாட்டையும் போட்டித்தன்மையையும் மேம்படுத்திக்கொண்டால் இது சாத்தியமாகலாம் எனக் கூறப்படுகிறது.
இந்தோனீசியாவிலிருந்து இதுவரை குறைவாகவே வெளிநாடுகளுக்குப் பண்ணை உணவு ஏற்றுமதி செய்யப்பட்டது. பெரிய சந்தையான உள்நாட்டில்தான் அதிகக் கவனம் செலுத்தப்பட்டது.

