மூவாண்டுகளில் முதன்முறையாக சிங்கப்பூரில் அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல்

மூவாண்டுகளில் முதன்முறையாக சிங்கப்பூரில் அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல்

1 mins read
41c71368-292a-4cdd-a612-c704ba14bbf3
சிங்கப்பூரில் நிறுத்தப்பட்டுள்ள 'யுஎஸ்எஸ் ரானல்ட் ரீகன்' கப்பல். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அணு­வா­யுத ஆற்­ற­லைக் கொண்ட அமெ­ரிக்கக் கடற்­ப­டை­யின் 'யுஎஸ்­எஸ் ரோனல்ட் ரீகன்' விமா­னந்­தாங்­கிக் கப்­பல் சிங்­கப்­பூ­ரின் சாங்கி கடற்­ப­டைத் தளத்­தில் நிறுத்­தப்­பட்டுள்­ளது. 2019ஆம் ஆண்­டுக்­குப் பிறகு அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த விமா­னந்­தாங்­கிக் கப்­பல் ஒன்று சிங்­கப்­பூ­ரில் நிறுத்­தப்­ப­டு­வது இதுவே முதல்­முறை.

அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­களை மீண்­டும் நிரப்­பிக்­கொள்ள துறை­மு­கங்­களில் கப்பல் நிறுத்­தப்­ப­டு­வதுண்டு. அந்த வகை­யில் இக்­கப்­பல் சிங்­கப்­பூ­ரில் சில நாள்­க­ளுக்கு இருக்­கும். இதில் உள்ளவர்களும் சிங்கப்பூரில் ஓய்­வெ­டுத்­துக்­கொள்­வர்.