அங் மோ கியோவில் புதிய மசெக பாலர் பள்ளி

அங் மோ கியோவில் புதிய மசெக பாலர் பள்ளி

1 mins read
7f800fed-7c8b-4863-bdb1-3df02fbecab2
டெக் கீ புளோக் 227ல் செயல்படும் மசெக அறநிறுவன ஸ்பார்க்கல்டாட்ஸ் பாலர் பள்ளியின் அதிகாரபூர்வ திறப்புவிழாவில் கலந்துகொண்ட பிரதமர் லீ சியன் லூங் பிள்ளைகளுடன் கலந்துறவாடினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மக்­கள் செயல் கட்சி சமூக அற­நிறு­வ­னம் அங் மோ கியோ ஸ்தி­ரீட் 23ல் உள்ள புளோக் 227ல் நடத்­தும் புதிய பிசி­எஃப் ஸ்பார்க்­கல்­டாட்ஸ் பாலர் பள்ளி நேற்று அதி­கா­ர­பூர்­வ­மாக தொடங்­கப்­பட்­டது.

டெக் கீ பகு­தி­யில் செயல்­படும் இத்­த­கைய முதல் பாலர் பள்ளி இதுவே ஆகும்.

பிர­த­ம­ரும் அங் மோ கியோ குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பிர­த­மர் லீ சியன் லூங் நேற்­றைய நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு பிள்­ளை­க­ளு­டன் கலந்­து­ற­வா­டி­னார்.

அந்த டெக் கீ பாலர் பள்ளி இந்த ஆண்டு ஜன­வ­ரி­யில் செயல்­படத் தொடங்­கி­யது.

அது மசெக சமூக அற­நி­று­வனம் நடத்­தும் 44 பாலர் பருவ நிலை­யங்­களில் ஒன்­றா­கும்.

அவை, பிறந்து இரண்டு மாதங்கள் ஆகும் கைக்­கு­ழந்­தை­கள் முதல் நான்கு வயது வரைப்­பட்ட பிள்­ளை­க­ளுக்கு முழு­நேர பரா­மரிப்­புச் சேவை­களை வழங்­கு­கின்­றன. டெக் கீ நிலை­யம் 17 கைக்­கு­ழந்­தை­க­ளுக்­கும் 106 சிறாருக்­கும் சேவை வழங்­கு­கிறது.

டெக் கீ பாலர்­ பள்ளி, அங் மோ கியோ­வில் இருக்­கும் கல்வி அமைச்சு பாலர் பள்­ளிக்­குப் பக்­கத்­தில் அமைந்­துள்­ளது.