அமைச்சர் வலியுறுத்து: இன நல்லிணக்கத்தை ஒரு நொடிகூட கிள்ளுக்கீரையாக கருதக்கூடாது

அமைச்சர் வலியுறுத்து: இன நல்லிணக்கத்தை ஒரு நொடிகூட கிள்ளுக்கீரையாக கருதக்கூடாது

2 mins read
7c94eef9-e177-4f1d-935f-2ffb85ccb89f
-

அருணா கந்­த­சாமி

இன நல்­லி­ணக்­கத்தை ஒரு நொடி நேரம்கூட நாம் கிள்­ளுக்­கீ­ரை­யா­கக் கரு­தக்கூடாது என்று கலா­சார, சமூக, இளை­யர்துறை அமைச்­சர் எட்­வின் டோங் வலி­யு­றுத்­தினார்.

இன நல்­லி­ணக்­கத்தைப் பேணி பாது­காத்­துப் பலப்­ப­டுத்த வேண்டும் என்­பதை வருங்­காலத் தலை­மு­றை­யி­ன­ரி­டம் நாம் கொண்டு சேர்க்க வேண்­டும் என்றும் அவர் கூறினார்.

நல்­லி­ணக்க தினத்தை முன்னிட்டு, பன்­முக கலா­சா­ரம், அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கு­தல் என்ற கருப்­பொ­ரு­ளு­டன் இளை­யர்­க­ளுக்­காக முதன்­மு­த­லாக மக்­கள் கழ­கம் ஏற்­பாடு செய்த கருத்­தரங்­கில் இரண்­டாம் சட்ட அமைச்­சரு­மான திரு டோங் பேசினார்.

இன நல்­லி­ணக்க தினத்தை இப்­போது நாம் மகிழ்ச்­சி­யா­கக் கொண்­டா­டு­கி­றோம் என்­றா­லும் அது 1964ஆம் ஆண்டு நடந்த இனக் கல­வ­ர­ங்களை நினை­வு­கூர்­வதை நாம் மறந்­து­வி­டக்கூடாது என்று அமைச்­சர் வலி­யு­றுத்­தி­னார்.

ராஃபிள்ஸ் கண்ட்ரி கிளப் மன­மகிழ் மன்­றத்­தில் நடந்த கருத்­தரங்­கிற்கு சுகா­தார மற்­றும் சட்ட அமைச்­சின் மூத்த நாடா­ளு­மன்­றச் செய­லா­ள­ர் ரஹாயு மஹ்­ஸாம் தலைமை தாங்­கி­னார்.

நற்­ப­ணிப் பேர­வை­யின் இளையர் மன்றத் தலை­வர் இள­மா­றன், சிங்­கப்­பூ­ரின் நீச்­சல் தங்க மகன் ஜோசஃப் ஸ்கூ­லிங், சிங்­கப்­பூர் கனி­வன்பு இயக்­கத்­தின் பங்­கா­ளித்­து­வப் பிரிவுத் தலை­வர் மிச்­செல் டே, ரோசஸ் ஆஃப் பீஸ் எனும் அமைப்­பின் நிறு­வ­ன­ரும் தலை­வரு­மான முக­மது இர்­ஷாத்,

ஆஃப்ரோ சிங்ஸ் எனும் சமூக ஊட­கப் பக்­கத்­தின் உரி­மை­யா­ளர் வெண்டி மேரி ஜெலின், மக்­கள் கழ­கத்­தின் மலாய் நற்­ப­ணிப் பேரவையின் இளை­யர் துணைக்­கு­ழு­வின் தலை­வர் சுலைக்கா ஸுல்­கி­ஃப்­லி­ ஆகி­யோர் கருத்­த­ரங்­கத்­தின் பேச்­சா­ளர்­க­ளாக கலந்­து­கொண்­ட­னர்.

அவர்­கள் தங்­கள் அனு­ப­வங்­களைப் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

நிகழ்ச்­சி­யில் கேள்வி பதில் அங்­க­மும் இடம்­பெற்­றது.

சிங்­கப்­பூ­ரில் இன, சமய நல்­லிணக்­கத்தை தக்­க­வைத்துக்கொள்­வது பற்­றி­யும் புதிய சிங்­கப்­பூ­ரர்­களைச் சமூ­கத்­தில் ஒன்­றி­ணைப்­பது பற்­றி­யும் விவா­திக்­கப்­பட்­டது.

அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கும் போக்கை மக்­க­ளி­டத்­தில் பேணி வளர்ப்­ப­தில் விளை­யாட்­டு­கள் பெரும் பங்கு வகிப்­ப­தாக ஜோசஃப் ஸ்கூ­லிங் கூறி­னார்.

இனம், சம­யம், மொழி, பாலி­னப் பார­பட்­ச­மின்றி அனை­வ­ருக்­கும் சுதந்­திர­மும் பேச்­சு­ரி­மை­யும் இருப்­பது அவசி­யம் என்று வெண்டி மேரி ஜெலின் தெரி­வித்­தார்.

கருத்­த­ரங்­கில் உரை­யாற்­றிய சமூக சேவை ஆர்­வ­லர் இள­மாறன், 29, இது­போன்ற கலந்­து­ரை­யா­டலில் இளையர் பங்கேற்று பலவற்றைத் தெரிந்­து­கொண்டு சமு­தா­யத்­திற்குத் தங்­க­ளால் முடிந்த அளவு பங்­காற்ற எண்­ணு­வது மன­நி­றை­வாக இருக்­கிறது என்­றார்.

சிங்­கப்­பூ­ரில் இளை­யர்­கள் நல்­லி­ணக்­கத்தைப் பற்றி தீவி­ர­மாக யோசிக்­கி­றார்­கள் என்­பதை இந்த நிகழ்ச்­சி­யின் மூலம் மேலும் அறிந்து­கொண்­டதாக கருத்­த­ரங்­கப் பேச்­சா­ள­ரான முக­மது இர்­ஷாத், 32, கூறி­னார்.

இந்­தக் கருத்­த­ரங்கில் கலந்து கொண்ட அனு­ப­வம் பயனுள்­ள­தாக இருந்­தது என்று நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்ட மற்றவர்­கள் தெரிவித் தனர். பல்­க­லைக்­க­ழக, பல­து­றைத் தொழில்­கல்­லூரி மாண­வர்­க­ளோடு புரா­ஜெக்ட் ஹில்ஸ், தேசிய இளை­யர் சாதனை விருது மன்­றம், இளம் ஆண்­கள் கிறிஸ்­துவ சங்­கம் போன்ற இளை­யர் சார்ந்த அமைப்பு­களும் நிகழ்ச்­சி­யில் பங்கேற்றன.

மக்­கள் கழ­கத்­தின் ஒருங்­கிணைப்பு மற்­றும் இயல்­பு­ரிமைக் குழு­வின் 15ஆம் ஆண்டு விழாவை போற்­றும் வித­மாக 'நல்­லி­ணக்க சமூ­கத்தை உரு­வாக்­கு­வோம்' என்ற தலைப்­பில் புத்­த­கம் வெளி­யி­டப்­பட்­டது.