புதிய இல்லப் பணிப்பெண் நிலையம் தெம்பனிசில் திறப்பு

புதிய இல்லப் பணிப்பெண் நிலையம் தெம்பனிசில் திறப்பு

2 mins read
83a6f3bc-ed74-44b0-b096-4571ecf9d570
புதிய இல்லப் பணியாளர் நிலையத்தை ஓய்வு எடுக்கவும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கும் பணிப்பெண்கள் பயன்படுத்தலாம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

முரண்பாடு களைய பணிப்பெண்களோடு முதலாளிகளும் உதவி நாடலாம்

வெளி­நாட்­டுப் பணிப்­பெண்­க­ளின் வேலை தொடர்­பான பிரச்­சினை

களைக் கையாள புதிய இல்­லப் பணி­யா­ளர் நிலை­யம் ஒன்று நேற்று அதி­கா­ர­பூர்­வ­மா­கத் திறக்­கப்­பட்டு உள்­ளது.

தெம்­ப­னிஸ் ஜங்­ஷன் இன்­கம் அலு­வ­லக வளா­கத்­தில் அமைந்­துள்ள 'சிடி­இ­க­னெக்ட்' என்­னும் இந்­நி­லை­யத்­தில் பணிப்­பெண்­க­ளின் முத­லா­ளி­களும் உதவி நாட­லாம். பிரச்­சினை தீர வழி­தே­டும் பணிப்­பெண்­க­ளுக்கு இங்கு முத­லா­ளி­கள் ஆலோ­சனை வழங்­கலாம்.

இதே­போன்ற ஒரு பணிப்­பெண் சேவை நிலை­யம் 75 பாசிர் பாஞ்­சாங் ரோட்டில் 2019ஆம் ஆண்டு நடுப்பகு­தியில் திறக்­கப்­பட்­டது. இந்த சேவை நிலை­யங்­கள் தேசிய தொழிற்­சங்க காங்­கி­ர­சின் முயற்­சி­யில் உரு­வா­னவை.

வார இறுதி நாள்­களில் ஓய்வு எடுக்­க­வும் பொழு­து­போக்கு நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­ட­வும் இந்த நிலை­யங்­கள் பணிப்­பெண்­க­ளுக்­குப் பயன்­படும். விழாக் கொண்­டாட்­டங்­கள், கைவி­னைத் திறன் பயி­ல­ரங்­கு­கள் போன்­ற­வை­யும் இங்கு இடம்­பெ­றும்.

முதல்­முறை சிங்­கப்­பூர் வரும் பணிப்­பெண்­க­ளி­டம் நேர்­கா­ணல் நடத்­த­வும் இல்­லப் பணி­யா­ளர் நிலை யம் பயன்­படும்.

நேர்­கா­ண­லின்­போது வாழ்க்­கை­யை­யும் வேலை­யை­யும் சரி­செய்து எவ்­வாறு செயல்­ப­டு­கி­றார்­கள் என்று மதிப்­பிட மனி­த­வள அமைச்­சின் சார்­பில் இந்த நேர்­கா­ணல் நடத்­தப்­ப­டு­கிறது.

வேலை­யில் சேர்ந்து ஆறு மாதங்­க­ளுக்­குள் நேர­டி­யாக, பணிப்­பெண்­க­ளின் சொந்த மொழி­யில் நேர்­கா­ணல் நடத்­தப்­படுகிறது.

2017ஆம் ஆண்­டிலிருந்து கிட்டத் தட்ட 60,000 பணிப்­பெண்­க­ளி­டம் நேர்­கா­ணல் நடத்­தப்­பட்­டுள்­ள­தாக மனி­த­வள அமைச்சு நேற்று தனது அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

கொள்­ளை­நோய் கார­ண­மாக 2020 ஏப்­ரல் முதல் இணை­யம் வழி­யாக நடத்­தப்­பட்ட நேர்­கா­ணல்­கள் இந்த மாத நடுப்­ப­கு­தி­யில் இருந்து மீண்­டும் நேர­டி­யாக நடத்­தப்­பட்டு வரு­கின்­றன.

தாம­த­மாகச் சம்­ப­ளம் வழங்­கு­தல், முத­லா­ளி­க­ளால் சட்­ட­வி­ரோ­த­மாக வேலைக்கு எடுத்­தல், பாது­காப்­பற்ற வகை­யில் வேலை வழங்­கு­தல் போன்ற பொது­வான பிரச்­சி­னை­கள் இது­போன்ற நேர்­கா­ணல்­

க­ளின்­போது வெளிப்­ப­டு­கின்­றன.

இதன் அடிப்­ப­டை­யில் முத­லா­ளி­க­ளி­டம் இல்­லப் பணி­யா­ளர் நிலை­யம் கருத்து கேட்­கும். பணிப்­பெண்­க­ளுக்­கும் முத­லா­ளி­க­ளுக்­கும் இடை­யில் கருத்­து­வே­று­பாடு உள்­ளதா என்று அப்­போது கேட்டு அறி­யப்­படும்.

பிரச்­சினை கடு­மை­யா­னது எனத் தெரி­ய­வ­ரும் பட்­சத்­தில் அது­பற்றி மனி­த­வள அமைச்­சி­டமோ அல்­லது காவல்­து­றை­யி­டமோ இந்­நி­லை­யம் புகார் அளிக்கும்.

ஆண்­டி­று­தி­யில் பணிப்­பெண்­கள் விவ­கா­ரம் தொடர்­பாக மேலும் பல நட­வ­டிக்­கை­கள் இடம்­பெ­றும் என்று நிலை­யத்­தின் பேச்­சா­ளர் கூறி­னார்.

வேலை­யில் சேர்ந்த ஓராண்­டுக்­குள் இரண்­டாம் முறை­யாக பணிப்­பெண்­க­ளி­டம் நேர்­கா­ணல் நடத்­து­ வ­தும் புதிய நட­வ­டிக்­கை­களில் அடங்­கும்.