போக்குவரத்து அமைச்சின் உபகாரச் சம்பளத்திற்குத் தகுதி

போக்குவரத்து அமைச்சின் உபகாரச் சம்பளத்திற்குத் தகுதி

2 mins read
e873443e-8351-4ed4-9a11-2d0ca9d7da72
-
multi-img1 of 2

மக்­க­ளுக்கு உத­வும் வகை­யி­லான திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தில் பங்­காற்ற வேண்­டும் என்­பது சட்­டம் பயி­லும் 20 வயது ஷ்ரு­தி­யின் கனவு. மக்­க­ளுக்கு நன்மை தரும் வித­மா­கத் தன் வேலை அமைய வேண்­டும் என்­பது மின்­ன­ணு­வி­யல் பொறி­யி­யல் துறை மாண­வர் 25 வயது லோகே­ச­னின் லட்­சி­யம். அண்­மை­யில் இவ்­வி­ரு­வ­ருக்­கும் போக்­கு­வ­ரத்து அமைச்­சின் உப­கா­ரச் சம்­பள விருதும் வழங்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூர் நிர்­வாகப் பல்­கலைக்­க­ழ­கத்­தில் முதலாம்­ஆண்டு சட்­டம் பயின்று வரும் 20 வயது ஷ்ருதி ஹரிணி ஜனார்த்­த­னன், சிங்­கப்­பூர் கடல்­துறை, துறை­முக ஆணை­யத்­தின் உப­கா­ரச் சம்­ப­ளத்­தைப் பெற்­றுள்­ளார். சட்­டம் பயின்­றா­லும் நீதி­மன்­றத்­தில் வாதா­டு­வ­தை­விட அர­சாங்­கத் திட்­டங்­க­ளை­யும் கொள்­கை­க­ளை­யும் வகுப்­ப­தில் தனக்கு ஆர்­வம் அதி­கம் என்­கிறார் இவர்.

இதன் கார­ண­மாக, துரி­த­மாக வளர்ந்­து­வ­ரும் துறை­கள் சார்ந்த அமைச்­சு­கள் ஒன்றில் பணி­பு­ரிய இவர் விரும்­பி­னார்.

வெவ்­வேறு துறை­கள் தொடர்­பான தக­வல்­களை இவர் திரட்­டத் தொடங்­கி­ய­போது, கடல்­துறை தனக்­குச் சுவா­ர­சி­ய­மா­கத் தோன்­றி­ய­தால் அதையே தேர்ந்­தெ­டுத்­த­தாக ஷ்ருதி தெரி­விக்கிறார்.

சட்ட அறிவு இத்­து­றை­யில் பணி­யாற்ற நேர­டி­யாக உத­வா­மல் போனா­லும் அதன் மூலம் கற்­கும் திறன்­களும் உத்­தி­களும் மக்­க­ளுக்கு உத­வும் வகை­யி­லான திட்­டங்­களை அமல்­ப­டுத்த உறு­து­ணை­யாக இருக்­கு­மென இவர் நம்­பு­கி­றார்.

உப­கா­ரச் சம்­ப­ளத்­திற்­குத் தகு­தி­பெற்­ற­தன்­வழி தன் குடும்­பத்­தின் பணச் சுமை­யைக் குறைக்க முடி­யும் என்­றும் இவர் நம்­பு­கி­றார்.

இத்­து­றை­யில் தன் பணி­யைச் சிறப்­பா­கக் கையாள, புதிய திறன்­கள் பல­வற்­றைக் கற்க வேண்­டிய சூழ்­நிலை ஏற்­ப­ட­லாம் என்­றா­லும் உற்­சா­கத்­து­டன் அதை எதிர்­பார்த்­துக் காத்­தி­ருப்­ப­தா­கக் கூறி­னார் ஷ்ருதி.

நிலப்­போக்­கு­வ­ரத்து ஆணை­யத்­தின் உப­கா­ரச் சம்­ப­ளத்தை நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழக இறு­தி­யாண்டு மாண­வர் லோகே­சன் ராஜேந்­தி­ரன், 25, பெற்­றுள்­ளார். மக்­கள் அன்­றா­டம் பயன்­ப­டுத்­தும் போக்­கு­வ­ரத்­துச் சேவை­ தொடர்­பான ஒரு துறை­யில் பணி­பு­ரி­யும் ஆர்­வம் தனக்கு ஏற்­பட்­ட­தாக இவர் தெரி­வித்­தார்.

பொறி­யி­யல் துறை­யில் அதிக ஆர்­வம் கொண்­டுள்ள இவர், ரயில்­க­ளின் மின்­சா­ரத் திற­னாற்­றல் பிரி­வில் பணி­யாற்ற உள்­ளார்.

பல்­க­லைக்­க­ழ­க இறு­தி­யாண்­டில் இந்த உப­கா­ரச் சம்­ப­ளத்­தைப் பெற்­றுள்­ள­தால் ஓராண்டு காலத்­திற்கு மட்­டுமே நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யத்­து­டன் பணி­யாற்ற வேண்­டிய நிலை. இருப்­பி­னும், ஆணை­யத்­து­ட­னான தனது சேவைக் காலத்தை லோகே­சன் நான்­காண்­டு­க­ளுக்கு நீட்­டித்­துள்­ளார்.

நிபு­ணத்­து­வப் பொறி­யா­ளர் உரி­மம் பெற்று இத்­து­றை­யில் தன் அறிவை வளர்க்க விரும்­பும் இவர், அதற்­குச் சில ஆண்­டு­கள் தேவை­யென்­பதை அறிந்து, இம்­மு­டிவை எடுத்­த­தா­கக் கூறு கிறார். எதிர்­கா­லத்­தி­லும் தொடர்ந்து இத்­து­றை­யில் சேவை­யாற்­றத் தான் விரும்­பு­வ­தாகவும் லோகே­சன் தெரி­வித்­தார்.

செய்தி: யுகேஷ் கண்­ணன்

படங்கள்: போக்குவரத்து அமைச்சு