வலுவடைந்துவரும் சிங்கப்பூர் நாணயத்தால் எத்தகைய தாக்கம் ஏற்படலாம் என்பதை வெளிநாட்டு வர்த்தகம் புரியும் சிங்கப்பூர் நிறுவனங்கள் உணரத் தொடங்கி உள்ளன.
உள்ளூர் நாணயம் வலுவாகும்போது நிலச்சொத்து மேம்பாட்டாளர்கள், உணவுபான வர்த்தகர்கள், வெளிநாட்டிலிருந்து பொருள்களைக் கொண்டுவரும் சில்லறை வர்த்தகர்கள் ஆகியோருக்குக் குறைந்த விலையில் உற்பத்திப் பொருள்கள் கிடைக்கும்.
இருப்பினும், வெளிநாட்டுச் சந்தைகளுக்கும் தொழில்துறை வர்த்தகங்களுக்கும் தங்களின் பொருள்களை விற்கும் சிங்கப்பூர் நிறுவனங்களிடமிருந்தும் ஏற்றுமதித் தேவை அதிகரிக்கலாம்.
உள்ளூர் நாணயம் வலுவடையும்போது சிங்கப்பூரிலிருந்து ஏற்றுமதியாகும் பொருள்கள் சிலவற்றின் போட்டித்தன்மை குறையலாம். அத்துடன் உற்பத்தித் துறையில் வெளிநாட்டு முதலீடும் தடைபடலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

