சிங்கப்பூர் நாணய மதிப்பின் உயர்வால் பலன்களும் போட்டித்தன்மையும் அதிகரிப்பு

சிங்கப்பூர் நாணய மதிப்பின் உயர்வால் பலன்களும் போட்டித்தன்மையும் அதிகரிப்பு

1 mins read
05faf2d2-c7bd-4ef1-99f0-cdda77516fe7
-

வலு­வ­டைந்­து­வ­ரும் சிங்­கப்­பூர் நாண­யத்­தால் எத்­த­கைய தாக்­கம் ஏற்­ப­ட­லாம் என்­பதை வெளி­நாட்டு வர்த்­த­கம் புரியும் சிங்­கப்­பூர் நிறு­வனங்­கள் உண­ரத் தொடங்­கி­ உள்ளன.

உள்­ளூர் நாண­யம் வலு­வா­கும்­போது நிலச்­சொத்து மேம்­பாட்­டாளர்­கள், உண­வு­பான வர்த்­த­கர்­கள், வெளி­நாட்­டி­லி­ருந்து பொருள்­க­ளைக் கொண்­டு­வ­ரும் சில்­லறை வர்த்­த­கர்­கள் ஆகி­யோ­ருக்­குக் குறைந்த விலை­யில் உற்­பத்திப் பொருள்கள் கிடைக்­கும்.

இருப்­பி­னும், வெளி­நாட்­டுச் சந்­தை­க­ளுக்­கும் தொழில்­துறை வர்த்­த­கங்­க­ளுக்­கும் தங்­க­ளின் பொருள்­களை விற்­கும் சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­க­ளி­ட­மி­ருந்­தும் ஏற்­று­மதித் தேவை அதி­க­ரிக்­க­லாம்.

உள்­ளூர் நாண­யம் வலு­வ­டை­யும்­போது சிங்­கப்­பூ­ரிலிருந்து ஏற்­று­ம­தியாகும் பொருள்­கள் சில­வற்­றின் போட்­டித்­தன்மை குறை­ய­லாம். அத்­து­டன் உற்­பத்­தித் துறை­யில் வெளி­நாட்டு முத­லீ­டும் தடை­ப­ட­லாம் என்­கின்­ற­னர் நிபு­ணர்­கள்.