பிணையில் விடுவிக்கப்பட்ட
போதிலும் மீண்டும் குற்றங்களைப் புரிந்த ஆடவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
40 வயது இந்திரன் தேவதாசுக்கு இரண்டு ஆண்டுகள், பத்து மாதங்கள், ஆறு வாரச் சிறைத் தண்டனையுடன் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
ஆயுதம் பயன்படுத்தி
வேண்டுமென்றே பிறருக்குக் காயம் விளைவித்தது, காவல்துறை அதிகாரியைத் தாக்கியது உட்பட தம்மீது சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளை இந்திரன்
ஒப்புக்கொண்டார்.
பிறரைத் தாக்கிய குற்றத்துக்காக இந்திரன் இதற்கு முன்பு சிறைக்குச் சென்றுள்ளார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பிணையில் விடுவிக்கப்பட்ட இந்திரன் 2020ஆம் ஆண்டு
ஏப்ரல் மாதம் 3ஆம் தேதியன்று மீண்டும் பழையபடி வன்முறையில் இறங்கினார்.
அப்போது அவருடன் வசித்து வந்த 50 வயது பெண்ணை அவர் தாக்கினார். அப்பெண்ணும்
இந்திரனும் திருமணம் செய்துகொள்ள இருந்ததாக நம்பப்படுகிறது. அதிகாலை 2.15 மணி அளவில் குடிபோதையில் வீடு திரும்பிய இந்திரன், அப்பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிப் போக,
வாசனைத் திரவப் போத்தலை அப்பெண் மீது இந்திரன் வீசினார். அந்த போத்தல் அப்பெண் மீது பட்டது. இதனால் அப்பெண்ணின் நெற்றிப் பகுதி வீக்கம் அடைந்தது.
இதையடுத்து, அப்பெண் வேறோர் ஆணுடன் தொடர்பு வைத்திருப்பதாக பரவிய வதந்தி களைக் கேட்டு அதே ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதியன்று அவருடன் மீண்டும் வாக்கு
வாதத்தில் இந்திரன் ஈடுபட்டார்.
பிறகு சம்பந்தப்பட்ட ஆடவரிடன் வீட்டுக்குச் சென்று அவரது முகத்தில் பலமுறை குத்திக் காயம் விளைவித்தார். காயமடைந்த ஆடவர் கூ டெக் புவாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவரது மண்டை ஓட்டில் முறிவு ஏற்பட்டது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது.
அத்துடன் அவரது உடலில் பல காயங்களும் இருந்தன.
இந்திரன் கைது செய்யப்பட்டு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் தேதியன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு மே மாதம் 23ஆம் தேதியன்று அப்பெண்ணுக்கும் இந்திரனுக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, வீட்டின் பூட்டை அப்பெண் மாற்றினார்.
இந்நிலையில், தாம் வேலையிடத்தில் இருந்தபோது இந்திரன் தமது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துவிட்டதாக இரண்டு நாள்கள் கழித்து அப்பெண் காவல்துறையினரிடம் புகார் செய்தார்.
அப்பெண்ணின் வீட்டிற்குக் காவல்துறை அதிகாரிகள் சென்றபோது, இந்திரன் அங்கு இருந்தார். பூட்டை உடைத்து வீட்டிற்குள் சென்றதை இந்திரன் அவர்
களிடம் ஒப்புக்கொண்டார்.
காவல்துறை அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். காவல்துறை வாகனத்தில் இருந்தபோது அதிகாரி ஒருவரின் இடது கரத்தை இந்திரன் உதைத்தார்.
அதன் பிறகு என்ன நடந்தது என்பது குறித்து நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கவில்லை. ஆனால் இந்திரன் இருந்த அதே குண்டர் கும்பலில் முன்பு இருந்த ஆடவர் ஒருவரை இந்திரனுக்கு அப்போது நிச்சயிக்கப்பட்ட பெண் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், ஈசூன் வட்டாரத்தில் உள்ள உணவகத்தில் கண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த 54 வயது ஆடவர்
இந்திரனின் உடல் ஆரோக்கியம் குறித்து வதந்திகளைப் பரப்பியதாக அப்பெண் தெரிவித்தார். எனவே அந்த ஆடவர் அங்கு இருப்பது குறித்து இந்திரனுக்கு அவர் தகவல் தெரிவித்தார். அரிவாளுடன் அங்கு வந்த இந்திரன், அந்த ஆடவரைத் தாக்கி அங்கி ருந்து தப்பி ஓடினார்.
அந்த ஆடவருக்கு வலது கண்ணிலும் கண் இமையிலும் முகத்திலும் காயங்கள் ஏற்பட்டன. காயம் காரணமாக அந்த ஆடவரால் அவரது கண்ணை மூட முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

