புதிய முன்பதிவு முறையால் இடம் கிடைக்காமல் தவிக்கும் 'பஸ்கிங்' கலைஞர்கள்

புதிய முன்பதிவு முறையால் இடம் கிடைக்காமல் தவிக்கும் 'பஸ்கிங்' கலைஞர்கள்

1 mins read
6c5cea41-c56c-4525-9110-63edd881f3bd
பொது இடங்களில் தங்கள் திறனை வெளிப்படுத்த விரும்புவோர் இணையம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பாட்டுப் பாடுவது, இசைக் கருவி வாசிப்பது, சாகசங்களில் ஈடுபடுவது எனத் தங்களுக்கு இருக்கும் திறன்களைப் பொது இடங்களில் மக்களிடம் வெளிப்படுத்த விரும்புவோருக்கு (பஸ்கிங்) இணையம் மூலம் முன்பதிவு செய்யும் முறையை தேசிய கலைகள் மன்றம் கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தியது.

இந்தப் புதிய அணுகுமுறை குறித்து சில பஸ்கிங் கலைஞர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

பொது இடங்களில் தங்கள் திறனை வெளிப்பிடுத்த பஸ்கிங் கலைஞர்களுக்காக இம்மாதம் ஒதுக்கப்பட்ட இடம் கிடைக்காமல் குறைந்தது இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய முன்பதிவு முறையில் உள்ள சில பிரச்சினைகளால் குறிப்பிட்ட சில திறன்களை வெளிப்படுத்த விரும்புவோருக்குத் தகுந்த இடம் கிடைக்காமல் போனதாக சிங்கப்பூர் பஸ்கிங் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் திரு ஜோனத்தன் கோ கூறினார்.

அது­மட்­டு­மல்­லாது, சிலர் இடங்­க­ளைப் பல மணி நேரத்­துக்­கும், பல நாள்­க­ளுக்­கும் முன்­ப­திவு செய்­து­வி­டு­வ­தால் மற்­ற­வர்­க­ளுக்கு வாய்ப்பு இல்­லா­மல் போவ­தாக திரு கோ தெரி­வித்­தார்.

புதிய முன்­ப­திவு அணு­கு­மு­றை­யின்­படி பஸ்­கிங் நட­வ­டிக்­கை­க­ளுக்­காக ஒதுக்­கப்­பட்­டுள்ள 70 இடங்­களில் மணி நேர அடிப்­ப­டை­யில் முன்­ப­திவு செய்­து­கொள்­ள­லாம்.

ஒரு­வர் ஓர் இடத்­தில் அதி­க­பட்­சம் ஆறு மணி நேரத்­துக்கு முன்­ப­திவு செய்­ய­லாம்.

அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்ள ஏறத்­தாழ 300 பஸ்­கிங் கலை­ஞர்­கள் அனை­வ­ருக்­கும் அனைத்து இடங்­க­ளி­லும் சம வாய்ப்பு கிடைக்க இந்­தப் புதிய அணு­கு­முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக மன்­றம் கூறி­யது.

மாதந்­தோ­றும் 1ஆம், 15ஆம் தேதி­களில் காலை 9 மணி முதல் முன்­ப­திவு செய்­யத் தொடங்­க­லாம். முத­லில் முன்­ப­திவு செய்­ப­வர்­க­ளுக்கு இடம் கொடுக்­கப்­படும்.