நியூகாசல் நகரின் தூதர்களாக நியமனம்; ஆறு சிங்கப்பூரர்களுக்குக் கிடைத்த கௌரவம்

நியூகாசல் நகரின் தூதர்களாக நியமனம்; ஆறு சிங்கப்பூரர்களுக்குக் கிடைத்த கௌரவம்

2 mins read
98004f4a-74ed-43f1-ba91-db3f6c945c21
நியூகாசல் நகரின் தூதர்களாக நியமிக்கப்பட்டதற்கு அடையாளமாக திரு கோ பூன் வான் (இடமிருந்து நான்காவது) உட்பட ஆறு சிங்கப்பூரர்களுக்கும் சாவிகள் வழங்கப்பட்டன. படம்: நியூகாசல் நகரம் -

ஆஸ்­தி­ரே­லி­யா­வின் நியூ­கா­ச­ல் நகரின் தூதர்­க­ளாக ஆறு சிங்­கப்­பூ­ரர்­கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

ஸ்டீ­வன்ஸ் சாலை அரு­கில் உள்ள சிங்­கப்­பூ­ருக்­கான ஆஸ்­தி­ரே­லி­யத் தூத­ரின் இல்­லத்­தில் இந்த கொழும்­புத் திட்ட கல்­வி­மான்­கள் கௌர­விக்­கப்­பட்­ட­னர்.

நிகழ்­வில் நியூ­கா­சல் நக­ரத்­தின் மேயர் நுவாட்­டாலி நெல்ம்ஸ்

கலந்­து­கொண்­டார்.

நியூ­கா­சல் நக­ரத்தை உலக நாடு­க­ளின் பார்­வைக்­குக் கொண்டு சென்­ற­தற்­காக அவர்­க­ளுக்கு இந்த கௌர­வம் அளிக்­கப்­பட்­டுள்­ளது.

கௌர­விக்­கப்­பட்­ட­வர்­களில் முன்­னாள் அமைச்­ச­ரும் எஸ்­பி­எச் மீடியா டிரஸ்ட்­டின் தலை­வ­ரு­மான கோ பூன் வானும் ஒரு­வர்.

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கத்­தின் முன்­னாள் தலைமை நிர்­வாகி சியோங் கூன் ஹியன், யுஓபி வங்கி­ யின் முன்­னாள் நிர்­வாக இயக்­கு­நர் பில் சுவா, மனி­த­வள மற்­றும் தக­வல், தொடர்பு, கலை­கள் அமைச்­சு­க­ளின் முன்­னாள் நிரந்­த­ரச் செய­லா­ளர் டான் சின் நாம், சிங்­கப்­பூர் உண­வுத் துறை­யின் முன்­னாள் தலைமை நிர்­வாகி பீட்­டர் டே பிவான் ஹுவாட், உகாண்­டா­வுக்­கான சிங்­கப்­பூ­ரின் தற்­போ­தைய தூதர் திரு ஜஸ்­பால் சிங் ஆகிய ஐவ­ருக்கு இந்­தக் கௌர­வம் கிடைத்­துள்­ளது.

இந்த ஆறு பேரும் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்­தில் உள்ள நியூ­கா­சல் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பயின்­ற­வர்­கள்.

"இந்த கொழும்­புத் திட்ட கல்வி­ மான்­க­ளுக்கு அர­சி­யல், வர்த்­த­கம், வீட­மைப்பு, மேம்­பாடு, போக்­கு­

வ­ரத்து ஆகி­ய­வற்­றில் நிறைய அனு­ப­வம் உள்­ளது. அவற்­றில் இவர்­கள் தடம் பதித்­த­வர்­கள்.

"நியூ­சா­லில் இருந்த கால­கட்­டத்தை இவர்­கள் மிகுந்த மகிழ்ச்சி­ யு­டன் நினை­வு­கூர்­கின்­ற­னர். தங்­கள் வெற்­றிக்கு நியூ­கா­ச­லில் இருந்­த­போது கிடைத்த அனு­ப­வங்களும் காரணம் என்று கூறு­கின்­ற­னர். இதைப் பாராட்டி இந்த ஆறு பேரை­யும் நியூ­கா­சல் நக­ரம் கௌர­விக்­கிறது. நியூ­கா­சலை உலக மக்­க­ளின் பார்­வைக்­குக் கொண்டு செல்ல இவர்­கள் மேற்­கொள்­ளும் முயற்­சியை நாங்­கள் வர­வேற்­கி­றோம்," என்று திரு­வாட்டி நெல்ம்ஸ் கூறி­னார். 2015ஆம் ஆண்­டி­லி­ருந்து 2020ஆம் ஆண்டு வரை போக்­கு­வ­ரத்து அமைச்­ச­ரா­கப் பதவி வகித்த திரு கோ, நியூ­கா­சல் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பொறி­யி­யல் பட்­டக் கல்வி பயின்­ற­வர். 1973ஆம் ஆண்­டில் அவ­ருக்கு கொழும்­புத் திட்ட உப­கா­ரச்­

ச­ம்ப­ளம் வழங்­கப்­பட்­டதை அடுத்து அவர் நியூ­கா­சல் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் இணைந்­தார். பட்­டக் கல்­வி­யின் இறுதி ஆண்­டில் அவர் ஆஸ்­தி­ரே­லி­யா­வில் திரு­ம­ணம் செய்­து­கொண்­டார். முன்­னாள் பிரிட்­டிஷ் கால­னித்­துவ நாடு­க­ளைச் சேர்ந்த ஆகச் சிறந்த மாண­வர்­கள், காமன்­வெல்த் நாடு­களில் உள்ள பல்­க­லைக்­க­ழ­கங்­களில் பட்­டக் கல்வி பயில 1951ஆம் ஆண்­டில் கொழும்­புத் திட்­டத்­தின்­கீழ் உப­கா­ரச்­சம்­ப­ளங்­கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டன.