உன்னதச் சேவையாற்றி அதிபர் விருது வென்ற ஆறு தாதிகள்

உன்னதச் சேவையாற்றி அதிபர் விருது வென்ற ஆறு தாதிகள்

1 mins read
d460dad7-28f4-46d1-9532-9e47cd16e63d
விருது வென்றவர்களுடன் அதிபர் ஹலிமா யாக்கோப் (நடுவில்), சுகாதார அமைச்சர் ஓங் யி காங் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

உன்­ன­த­மா­கச் சேவை­யாற்­றிய ஆறு தாதி­க­ளுக்கு நேற்று அதி­பர் விருது வழங்­கப்­பட்­டது.

மன­ந­லக் கழ­கத்­தைச் சேர்ந்த தாதிமை மருந்­த­க­ரான 60 வயது திரு அசிஸ் எபி ஹமீது, கேகே மக­ளிர், சிறார் மருத்­து­வ­ம­னை­யின் தாதி­மைப் பிரி­வின் துணைத் தலை­வ­ரான 47 வயது திரு­வாட்டி ஜூலியா எங் சியூ லீ, அசிசி அந்­தி­ம­கால நிலை­யத்­தைச் சேர்ந்த மூத்த தாதி­மைக் கல்­வி­யா­ள­ரான 42 வயது திரு­வாட்டி லியூ ஃபாங், டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­யின் தாதி­மைப் பிரி­வின் துணைத் தலை­வ­ரான 56 வயது திரு­வாட்டி நிர்­மலா கர்­ம­ரூன், சாங்கி பொது மருத்­து­வ­ம­னை­யைச் சேர்ந்த தலை­மைத் தாதி­ய­ரான 50 வயது திரு­வாட்டி பிங் கெக் கெங், செங்­காங் பொது மருத்­து­வ­ம­னை­யின் தாதி­மைப் பிரி­வின் உதவி இயக்­கு­

ந­ரான 46 வயது திரு­வாட்டி சாங் டி ஆகி­யோர் விரு­து­க­ளைப் பெற்­ற­னர். விருது வென்­ற­வர்­களில் ஒரு­

வ­ரான திரு அசிஸ் எபி ஹமீது, மன­ந­லக் கழக நோயா­ளி­கள் மருத்­து­வ­ம­னைக்கு வெளியே யாரு­டைய தய­வை­யும் எதிர்­பார்க்­கா­மல் வாழ உரு­வாக்­கப்­பட்ட மறு­வாழ்­வுத் திட்­டத்­துக்கு தலை­மை­தாங்­கி­னார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

மறு­வாழ்­வுத் திட்­டத்­தில் ஈடு­பட்டு இது­வரை 120 பேர் வீடு திரும்­பி­யுள்­ள­னர்.