கடல்துறை, கடலோரப் பொறியியல், கடல் போக்குவரத்து, கனமழை, கடலோரப் பாதுகாப்பு ஆகியவை தொடர்பாக கூடுதல் ஆய்வு நடத்த உதவும் வகையில் சிங்கப்பூரின் முதல் செயற்கை கடற்படுகை உருவாக்கப்பட்டுள்ளது.
$107 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட இந்தச் செயற்கை கடற்படுகை நேற்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் உள்ள டிகோம்ஸ் கட்டடத்தில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
இந்த ராட்சத நீச்சல் குளத்தைக் கட்டி முடிக்க எழு ஆண்டுகள் ஆகின.
60 மீட்டர் நீளம், 48 மீட்டர் அகலம் கொண்ட இந்த கடற் படுகை 12 மீட்டர் ஆழம் கொண்டது. இதன் பரப்பளவு 40 இருக்கைகள் கொண்ட ஐந்து பேருந்து களுக்குச் சமம்.

