சிறப்புத் தேவை மாணவர்களை வேலைக்கு ஆயத்தப்படுத்தும் புதிய பாடத்திட்டம்

சிறப்புத் தேவை மாணவர்களை வேலைக்கு ஆயத்தப்படுத்தும் புதிய பாடத்திட்டம்

2 mins read
cef506d4-7d3a-485a-8bd6-df20e20ddba7
சிறப்புத் தேவையுள்ள மாணவரான பெர்னைசும் அவரது தாயாரும். படம்: சாவ்பாவ் -

தீவு முழு­வ­தும் உள்ள 20 சிறப்­புக் கல்­விக்­கான பள்­ளிக்­கூ­டங்­களில் அடுத்த ஆண்டு முதல் புதிய தொழிற்கல்வி பாடத்­திட்­டம் அறி­மு­கம் செய்­யப்­பட உள்­ளது.

படித்­ததும் வேலை­யில் சேர மாண­வர்­களை ஆயத்­தப்­ப­டுத்­து­

வ­தற்­கான முயற்­சி­யின் ஒரு பகு­தி­யாக இந்த நட­வ­டிக்கை இடம்­பெ­று­கிறது.

புதிய பாடத்­திட்­டத்­தின்­கீழ், 13 வய­துக்­கும் 18 வய­துக்­கும் இடைப்­பட்ட சிறப்­புத் தேவை­யு­டைய மாண­வர்­க­ளுக்கு பல­த­ரப்­பட்ட வேலை­கள் தொடர்­பான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட வாய்ப்பு கிட்­டும்.

அதற்­கேற்ற வகை­யில் பள்­ளிக்­கூ­டங்­கள் புதிய பாடங்­க­ளைக் கற்­பிப்­ப­தில் முக்­கி­யத்­து­வம் காட்­டும்.

பொது­வான வேலை­வாய்ப்­பு­க­ளோடு வீட்­டி­லி­ருந்து வேலை செய்­தல், சுய­தொ­ழில் புரி­தல் போன்ற ஏற்­பா­டு­கள் தொடர்­பான விரி­வான அம்­சங்­களில் மாண­வர்­க­ளைத் தயார்ப்­ப­டுத்­து­வ­தில் பள்­ளிக்­கூ­டங்­கள் கவ­னம் செலுத்­தும்.

பொலி­வூட்­டப்­பட்ட புதிய பாடத்­திட்­டத்தை இரண்­டாம் கல்வி அமைச்­சர் மாலிக்கி ஒஸ்­மான் நேற்று ரெயின்போ சென்­டர் ஈசூன் பார்க் பள்­ளி­யில் தொடங்கி வைத்­தார்.

பின்­னர் அவர் உரை­யாற்­று­கை­யில், ஒவ்­வொரு மாண­வ­ரும், அவ­ரின் சிறப்­புத் தேவைக்­கான அளவு எந்த நிலையில் உள்­ளது என்­ப­தற்­கும் அப்­பால் தங்­க­ளது சொந்த வழி­யில் சமூ­கத்­திற்­குப் பங்­க­ளிக்க முடி­யும் என்­றார்.

வேலை என்­பது பொரு­ளி­யல் மதிப்­பின் ஒரு நட­வ­டிக்­கை­யாக இருக்­க­வேண்­டும் என்­ப­தன் அடிப்­ப­டை­யில் ஒவ்­வொரு வேலைக்­கும் சம்­ப­ளம் தரப்­ப­டு­வது என்­பது வழக்­க­மான ஒன்­று­தான்.

இருப்­பி­னும் பலர் அவர்­க­ளின் வேலைக்­கான ஊதி­யத்­தைப் பெறு­வ­தில்லை.

நமது புதிய பாடத்­திட்­டம் பல்­வேறு வடி­வத்­தில் வேலை­களை உரு­வாக்­கும். நமது மாண­வர்­க­ளின் மதிப்­பு­மிக்க பங்­க­ளிப்­புக்கு நாம் அங்­கீ­கா­ரம் வழங்க வேண்­டும். பொது­வான வேலையை வச­திக்­கேற்­ற­தாக மாற்றி அமைக்­க­வும் வேலை­யி­டத்­தில் செய்ய வேண்­டிய வேலையை வீட்­டில் இருந்து செய்­ய­வும் தொண்­டூ­ழி­யம் புரி­ய­வும் மாண­வர்­க­ளால் முடி­யும் என்­ப­தற்­கான அங்­கீ­கா­ரம் அது.