சக்கர நாற்காலியில் வந்தவரைத் தாக்கிய முதியவருக்கு மூன்று வாரச் சிறைத்தண்டனை

சக்கர நாற்காலியில் வந்தவரைத் தாக்கிய முதியவருக்கு மூன்று வாரச் சிறைத்தண்டனை

2 mins read
4f3617ef-bce6-44f7-b604-fa470dd11bd9
-

சக்­கர நாற்­கா­லி­யில் வந்­த ஒரு­வ­ரைத் தாக்­கிய குற்­றத்­திற்­காக 72 வயது முதி­ய­வர் ஒரு­வ­ருக்கு நீதி­மன்­றம் நேற்று மூன்று வாரச் சிறைத் தண்­டனை விதித்­துத் தீர்ப்­ப­ளித்­தது.

தாக்­கப்­பட்ட அந்த ஆட­வர் பெரு­மூளை வாத நோய் பாதிப்புக்கு ஆளானவர். இரு­வ­ருக்­கும் நடந்த வாய்த்­த­க­ரா­ற்றின்­போது கோபத்­தின் உச்­சிக்­குச் சென்ற அந்த முதி­ய­வர், சக்­கர நாற்­கா­லி­யில் வந்த ஜூரைமி மீது ஓங்கி ஒரு குத்­து­விட்­டார். அதைத் தாங்க முடி­யாத சக்­கர நாற்­கா­லி­யில் வந்­த­வர் சற்று நேரம் அப்­ப­டியே மயங்­கி­விட்­டார். இந்­தச் சம்­ப­வத்­தில் சக்கர நாற்காலியில் வந்த 48 வயது ஆட­வர் ஜுரைமி ஜஃபாருக்கு மூக்கு உடைந்­தது.

ஜூலை 26ஆம் தேதி நடந்த நீதி­மன்ற விசா­ர­ணை­யில் 72 வயது அப்­துல் ரஹ்­மான் முக­மது ஹனா­ஃபியா, தன் மீது சுமத்­தப்­பட்ட தாக்­கு­தல் குற்­றச்­சாட்டை ஒத்­துக்­கொண்­டார். அத­னை­ய­டுத்து நீதி­மன்­றம் அவ­ருக்கு மூன்று வாரச் சிறைத் தண்­டனை விதித்­­தது.

பெரு­மூளை நோயால் பாதிக்­கப்­பட்­டுள்ள அந்த ஆட­வரை, அவ­ரது தாயார் கவ­னித்து வரு­கிறார்.

தாக்­கிய அப்­துல் ரஹ்­மா­னும் அந்த வீட்­டில் வசித்து வந்­தார். ஜூரை­மி­யின் தாயார், அப்­துல் ரஹ்­மா­னின் வளர்ப்­புச் சகோ­தரி ஆவார்.

ஜூரைமி, தனது சொந்த வீட்­டுக்­குச் சென்று கடி­தங்­கள் ஏதும் வந்­துள்­ள­னவா என்று பார்ப்­பது வழக்­கம்.

அவ்­வாறு கடந்த மார்ச் 3ஆம் தேதி மாலை 6.30 மணிக்­குச் சென்­றி­ருந்­தார்.

அப்­போது அங்கு அப்­துல் ரஹ்­மான், ஜூரை­மி­யைப் பார்த்து, அனைத்­துப் பொருள்­க­ளை­யும் எடுத்­துச்­செல்­லும்­படி கத்­தி­னார்.

அதன்­பின் இரு­வ­ருக்­கும் நடந்த வாக்­கு­வா­தத்­தின்­போது ஆத்­தி­ரம் அடைந்த அப்­துல் ரஹ்­மான், ஜூரை­மி­யைத் தாக்­கி­ய­தா­கத் தெரி­கிறது.