போதைப்பொருள் குற்றவாளிகளை நோயில் இருந்து காக்க திட்டம்

போதைப்பொருள் குற்றவாளிகளை நோயில் இருந்து காக்க திட்டம்

1 mins read
17c2a452-e78a-47d6-9ada-0f3f50738dfe
-

முன்­னாள் போதைப்­பொ­ருள் குற்­ற­வா­ளி­க­ளுக்­குப் பரி­சோ­தனை செய்து கல்­லீ­ரல் அழற்சி தொடர்­பான நோய்­க­ளுக்­குச் சிகிச்சை அளிக்க இரண்டு திட்­டங்­கள் நேற்று அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டன.

போதைப் புழக்­கத்­தால் கல்­லீ­ரல் அழற்சி நோய்க்கு ஆளாகி ஆபத்தை எதிர்­நோக்­கும் முன்­னாள் போதைப்­பொ­ருள் குற்­ற­வா­ளி­க­ளுக்கு அது குறித்து விளக்கி, சோதித்து சிகிச்­சை­ய­ளிக்­கும் வகை­யில் இந்­தத் திட்­டம் செயல்­படும். பாதிக்­கப்­பட்ட நோயா­ளி­கள் டான் டோக் செங் மருத்­து­வ­மனைக்குப் பரிந்­து­ரைக்­கப்­ப­டு­வர். அவர்­க­ளுக்கு மானி­யத்­து­ட­னான சிகிச்சை அளிக்­கப்­படும்.

கடந்த பத்து ஆண்­டு­களில் போதைப்­பொ­ருள் குற்­ற­வா­ளி­களில் 30 முதல் 40 விழுக்­காட்­டி­னர் கல்­லீ­ரல் அழற்சி நோயால் பாதிக்­கப்­பட்­ட­தாக டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­யின் மூத்த ஆலோ­ச­கர் டாக்­டர் இயூ குவோ சாவ் கூறி­னார்.

ஒப்­பு­நோக்­க கல்­லீ­ரல் அழற்சி நோயால் பாதிக்­கப்­படும் சிங்­கப்­பூ­ரர்­கள் 0.2 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே என்­கிறது தேசிய பல்­க­லைக் கழக மருத்­து­வ­ம­னை­யின் இணை­யத்­த­ளம். இந்­தப் புதிய திட்­டத்­தின் முதல் கட்­ட­மாக 65 போதைப்­பொருள் குற்­ற­வா­ளி­க­ளுக்கு கல்­லீ­ரல் குறித்த அறி­வைப் போதிப்­ப­து­டன், பரி­சோ­தித்து சிகிச்­சை­யும் அளிக்­கப்­படும். சிகிச்சை பெறு­வோர் எண்­ணிக்கை 2023ஆம் ஆண்டு மத்­தி­யில் 200க்கும் மேல் அதி­க­ரிக்­கப்­படும். சிங்­கப்­பூ­ரில் முதன்­மு­து­லாக இது­போன்ற குழு­வி­ன­ரி­டையே கல்­லீ­ரல் அழற்சி நோய் பர­வா­மல் தடுக்­கும் வகை­யில் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. ஹெப்படைட்டிஸ் சி என்­னும் நோய் இரத்­தம் வாயி­லா­க­வும் உட­லின் வெளிப்­படும் திர­வம் வழி­யா­க­வும் பர­வக்­கூ­டி­யது. இந்த நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு சிகிச்சை அளிக்­கா­மல் விட்­டு­விட்­டால் அது அவர்­க­ளின் நுரை­யீ­ர­லில் பாதிப்பை ஏற்­ப­டுத்தி நுரை­யீ­ரல் புற்­று­நோய் உரு­வாக வழி­வ­குத்­து­வி­டும் என்கிறது ஆய்வு.