தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதுப்பிப்புப் பணி ஒப்பந்ததாரர்கள் மீதான புகார்கள் அதிகரிப்பு

2 mins read
b15c22bb-5a92-4274-ae62-bdf196c18af0
-

புதுப்­பிப்­புப் பணி ஒப்­பந்­ததாரர்கள் மீதான புகார்­கள் அதி­க­ரித்­துள்­ளன. இவ்­வாண்­டின் முதல் ஆறு மாதங்­கள் அதன் எண்­ணிக்கை 28 விழுக்­காடு ஏற்­றம் கண்­டுள்­ளது.

ஒப்­பந்­த­தா­ரர்­க­ளுக்கு எதி­ராக ஜன­வரி மாதத்­தி­லி­ருந்து ஜூன் மாதம் வரை 807 புகார்­கள் பதி­வாகி உள்­ள­தாக சிங்­கப்­பூர்

பய­னீட்­டா­ளர் சங்­கம் தெரி­வித்­

துள்­ளது.

கடந்த ஆண்­டின் முதல் ஆறு மாதங்­களில் ஒப்­பந்­த­தா­ரர்­க­ளுக்கு எதி­ராக 627 புகார்­கள் மட்­டுமே செய்­யப்­பட்­டிருந்தன.

புதுப்­பிப்­புப் பணி ஒப்­பந்­தத்­

தா­ரர்­க­ளுக்கு எதி­ராகக் கடந்த ஆண்­டில் 1,300 புகார்­கள் பதி­

வா­கின. ஒப்­பந்­த­தா­ரர்­கள் மீது 2020ஆம் ஆண்­டில் 869 புகார்­கள் பதி­வா­கின.

பதி­வான புகார்­களில் பெரும்­பா­லா­னவை நிர்­ண­யிக்­கப்­பட்ட கால­கட்­டத்­துக்­குள் புதுப்­பிப்­புப் பணி­களை முடிக்­கா­தது, திருப்­திக­ர­மற்ற பணி­கள் ஆகி­ய­வற்­று­டன்

தொடர்­பு­டை­யவை.

கடந்த ஆறு மாதங்­களில்

வீட்­டுப் புதுப்­பிப்­புப் பணி­கள் துறை மீது ஆக அதி­க­மான புகார்­கள் செய்­யப்­பட்­டுள்­ளன.

அத­னைத் தொடர்ந்து, மின்­சார, மின்­ன­ணு­வி­யல், அழகு, மோட்­டார் வாக­னம் ஆகிய துறை­கள் மீதும் அதி­க­மான புகார்­கள் பதி­வாகி உள்­ளன.

கடந்த ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் இத்­து­றை­க­ளுக்கு எதி­ரா­கச் செய்­யப்­பட்­டுள்ள புகார்­கள் இவ்­வாண்டு அதி­க­ரித்­துள்­ளன.

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரை சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்திடம் மொத்தம் 7,960 புகார்கள் பதிவாகின.

கடந்த ஆண்டு பதிவான புகார்களைவிட இது 9 விழுக்காடு அதிகம்.

கொவிட்-19 தொடர்­பான

கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்டு வர்த்­தக நட­வ­டிக்­கை­களும் பய­னீட்­டா­ளர் பரி­வர்த்­த­னை­களும் அதி­க­ரித்­தி­ருப்­ப­தால் புகார்­க­ளின் எண்­ணிக்­கை­யும் உயர்ந்­தி­ருப்­ப­தாக சங்­கத்­தின் தலை­வர் மெல்­வின் யோங் கூறி­னார்.

"பய­னீட்­டா­ளர்­க­ளுக்கு எதி­ரான நியா­ய­மற்ற நடை­மு­றை­க­ளைக் கண்டு­பி­டிக்க சங்­கம் தொடர்ந்து உன்­னிப்­பா­கக் கண்­கா­ணிக்­கும், இதற்­கி­டையே, சிங்­கப்­பூ­ரில்

பய­னீட்­டா­ளர் பாது­காப்­புச் சட்­டங்­களை மேலும் வலுப்­ப­டுத்த அதி­கா­ரி­க­ளு­டன் சங்­கம் ஒன்­றி­ணைந்து செயல்­படும்," என்று திரு யோங் தெரி­வித்­தார்.