சிங்கப்பூரில் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பாலர் பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தேசிய சுற்றுப்புற வாரியமும் தெமாசெக் அறநிறுவனமும் கொசு விரட்டிகளை வழங்க இருக்கின்றன.
இவ்வாண்டில் இதுவரை ஏறத்தாழ 22,000 பேர் டெங்கியால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு டெங்கியால் மொத்தம் 5,258 பேர் மட்டுமே பாதிப்படைந்தனர். இந்தத் தகவலை தேசிய சுற்றுப்புற வாரியமும் தெமாசெக் அறநிறுவனமும் இணைந்து நேற்று வெளியிட்டன. டெங்கிக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர், பராமரிப்பாளர்கள் ஆகியோர் இணைந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங் அழைப்பு விடுத்துள்ளார். தீவெங்கும் உள்ள ஏறத்தாழ 800,000 மாணவர்களுக்கு 30 மில்லி லிட்டர் கொசு விரட்டியை வழங்கும் திட்டத்தை அவர் நேற்று தொடங்கிவைத்தார்.
ஒவ்வொரு போத்தலுடன் டெங்கிக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப் பிரசுரம் இருக்கும். சமூகப் பராமரிப்பு அமைப்புகளின் சேவையைப் பெறுபவர்கள் தங்கள் இல்லத்துக்கு அருகில் உள்ள சமுக சேவை அலுவலகத்திலிருந்து கொசு விரட்டிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
கொசு இனப்பெருக்கத்தைத் தடுக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மாணவர்
களுக்குப் பள்ளிகள் கற்பித்துள்ளன. டெங்கியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள வட்டாரங்களில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்
களைப் பாதுகாக்க கூடுதல் நட
வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு முன்பு கொசு விரட்டித் திரவத்தைத் தடவிக்கொள்ளவேண்டும் என்றும் இதை அவர்களது பெற்றோர் உறுதி செய்ய வேண்டும் என்றும் தேசிய சுற்றுப்புற வாரியமும் தெமாசெக் அறநிறுனமும் வலியுறுத்தின.
"டெங்கி பாதிப்பு அதிகரித்து வருவதால் மெத்தனத்துடன் இருக்கக்கூடாது. அனைவரும் ஒன்றிணைந்து டெங்கி பாதிப்புச் சங்கிலியை உடைத்தெறிவோம்.
"வெளிப்புறங்களில் இருக்கும்போது கொசு விரட்டித் திரவத்தைத் தடவிக்கொள்வது போன்ற நட
வடிக்கைகளை மேற்கொள்ள ஒருவருக்கொருவர் ஊக்குவிக்க வேண்டும். இதன்மூலம் டெங்கிக்கு எதிரான முயற்சிக்குத் தயாராகலாம். வீட்டில் ஏடிஸ் கொசு இனப்பெருக்கத்தைத் தடுக்க வேண்டும்," என்று தெமாசெக் அறநிறுவனத்தின்
சமூகக் கட்டமைப்பு, பங்காளித்துவப் பிரிவின் தலைவர் வூன் சேட் நியூன் கூறினார்.

