மேலும் ஒருவருக்குக் குரங்கம்மை

மேலும் ஒருவருக்குக் குரங்கம்மை

1 mins read
d972e10f-a2c1-4da8-a641-03704924c552
-

சிங்­கப்­பூ­ரில் நேற்று முன்­தின நில­வ­ரப்­படி மேலும் ஒரு­வ­ருக்­குக் குரங்­கம்மை ஏற்­பட்­டுள்­ளது.

இவரையும் சேர்த்து சிங்­கப்­பூ­ரில் இது­வரை 11 பேர் குரங்­கம்­மை­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று 32 வயது ஆட­வ­ருக்­குக் குரங்­கம்­மைத் தொற்று ஏற்­பட்­

டி­ருப்­பது உறுதி செய்­யப்­பட்­டது.

அவர் தற்­போது தொற்று நோய்­க­ளுக்­கான தேசிய நிலை­யத்­தில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­வ­தாக சுகா­தார அமைச்சு கூறியது.

அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இம்மாதம் 12ஆம் தேதியன்று அந்த ஆடவருக்குக் காய்ச்சலும் உடலில் புண்ணும் ஏற்பட்டது.