சுற்றுப்புற, சமூக, ஆளுமை தர நிதி பெற புதிய நெறிமுறைகள்

சுற்றுப்புற, சமூக, ஆளுமை தர நிதி பெற புதிய நெறிமுறைகள்

1 mins read
c280fc17-0a26-41cd-a5cf-f0af06055439
-

சுற்­றுப்­புற, சமூக ஆளுமைத் (இஎஸ்ஜி) தரங்­களை நிறை­வேற்று­கின்ற சில்­லறை முத­லீட்டு நிறு­வ­னங்­கள் நிதி வச­தி­யைப் பெற இனி­மேல் புதிய வழி­காட்டி நெறி­மு­றை­யைப் பின்­பற்ற வேண்டி இருக்­கும்.

சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் அந்த நெறி­மு­றை­களை வெளி­யிட்டு இருக்­கிறது.

அதன்­படி, அத்­த­கைய நிறு­வனங்­கள் தாங்­கள் விடுக்­கும் கோரிக்­கை­க­ளுக்கு ஆத­ர­வான ஆவ­ணங்­களைத் தாக்­கல் செய்ய வேண்­டும்.

சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உகந்த, பரு­வ­நி­லை­யால் பாதிக்­கப்­ப­டாத நிதித் துறையை சிங்­கப்­பூர் எப்­படி பலப்­படுத்த முடி­யும் என்­ப­தன் தொடர்­பி­லான தனது இரண்­டா­வது வரு­டாந்­திர அறிக்­கையை இந்த ஆணை­யம் நேற்று வெளி­யிட்­டது. அதில் இந்­தப் புதிய வழி­காட்டி நெறி­மு­றை­கள் வெளி­யி­டப்­பட்டு இருக்­கின்­றன.

இந்த நெறி­மு­றை­கள் 2023 ஜன­வ­ரி­யில் நடப்­புக்கு வரும்.

சில்­லறை முத­லீட்­டா­ளர்­கள் தாங்­கள் முத­லீடு செய்­யும் இஎஸ்ஜி நிதி­ பற்றி நன்கு தெரிந்து­கொள்ள இந்த வழி­காட்டி நெறி­மு­றை­கள் உத­வும்.

பசு­மைத்­திட்ட மோசடி ஆபத்து­களை அவை குறைக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

இந்த ஆணை­யத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் ரவி மேனன், வரு­டாந்­திர ஆண்டு அறிக்­கையை பற்றி விளக்­கி­ய­போது இந்த விவ­ரங்­களைத் தெரி­வித்­தார்.