நிதி சீரமைப்பு: அதிக சிறார் குற்றவாளிகளுக்கு உதவும்

நிதி சீரமைப்பு: அதிக சிறார் குற்றவாளிகளுக்கு உதவும்

1 mins read
bda5cccc-8196-453a-aaa8-eb4385e1c7bf
-

சிங்­கப்­பூ­ரில் குற்­ற­வா­ளி­க­ளுக்­கும் அவர்­க­ளின் குடும்­பங்­க­ளுக்­கும் உத­வு­கின்ற தொழில்­துறை மற்­றும் சேவை­கள் கூட்­டு­றவுச் சங்­கத்­தின் அறப்­பணி நிதி­ய­மைப்பு 'இஸ்­கோஸ் ரீஜென் ஃபண்ட்' என்று குறிப்­பி­டப்­பட்­டது.

அது இப்­போது சீர­மைக்­கப்­பட்டு அதற்­குப் புதி­தாக 'நியூ­ஜென் ஃபண்ட்' என்று பெய­ரி­டப்­பட்டு உள்­ளது.

குற்­ற­வா­ளி­க­ளான சிறா­ருக்கு சீர­மைக்­கப்­பட்ட நிதி மூலம் மேலும் ஆத­ரவு கிடைக்­கும்.

இல­வச பாட வகுப்பு, மதி­யுரை ஆலோ­சனை, கலைப் பயிற்சி, குடும்பப் பிணைப்பு பயிற்சி உள்ளிட்ட மேலும் பல செயல்­திட்­டங்­களும் நடப்­புக்கு வரும்.

விவோ­சிட்­டி­யில் புதன்­கி­ழமை நடந்த நிகழ்ச்­சி­யில் அந்த அறப்­பணி அமைப்பு புதிய பெய­ரை­யும் புதிய செயல்­திட்­டங்­க­ளை­யும் பற்றி அறி­வித்­தது.

நிதி அமைப்பு சீர­மைக்­கப்­பட்டு இருப்­ப­தை­ய­டுத்து உதவி தேவைப்­படும் மேலும் அதிக சிறார்­களை எட்ட முடி­யும் என்று அந்த அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

கொவிட்-19க்குப் பிந்­திய உல­கில் ஏற்­ப­டக்­கூ­டிய சவால்­க­ளைக் கையாள தோதாக அந்த அறப்­பணி அமைப்பு சென்ற ஆண்­டில் தனது உத்­தி­யை மறு­ப­ரி­சீ­லனை செய்­தது. அதன் விளை­வாக நிதி­ய­மைப்பு சீர­மைக்­கப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

மற்ற சிறா­ரு­டன் ஒப்­பி­டு­கை­யில் குற்­ற­வா­ளி­கள் என்று தீர்ப்­பளிக்­கப்­படும் பெற்­றோ­ரின் பிள்ளை­கள் குற்­றச் செயல்­களில் ஈடு­ப­டு­வ­தற்­கான வாய்ப்பு கிட்­டத்­தட்ட மூன்று மடங்கு அதி­கம் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்­சும் தேசிய சமூக சேவை மன்­ற­மும் 2020 ஆம் ஆண்டு நடத்­திய ஆய்வு மூலம் தெரி­ய­வந்­தது.