ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று கிட்டத்தட்ட 600 குடும்பங்களுக்கு இறைச்சிப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 கிலோ இறைச்சி வழங்கப்பட்டது. தியாகத் திருநாளாகக் கருதப்படும் ஹஜ்ஜுப் பெருநாள் ஜூலை 9ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
கால்நடைகளைப் பலியிட்டு, அவற்றின் இறைச்சியைத் தேவையுள்ளோருக்கு தானமாக வழங்கும் கொர்பான் சமயச்சடங்கும் வழிபாடும் இந்தப் பெருநாளையொட்டி நடத்தப்படுவது வழக்கம்.
ஒனான் ரோட்டில் உள்ள எம்சிஏஎஸ் என்னும் முஸ்லிம் சங்கக் கட்டடத்தில் நேற்று இறைச்சிப் பொட்டலங்கள் வந்திறங்கின. 60க்கும் மேற்பட்ட கார்களிலும் வேன்களிலும் அவை கொண்டு வரப்பட்டன. மூன்று மணி நேரத்தில் அவை அத்தனையும் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டன. இங்குள்ள 50 மலேசியர்களுக்கும் இறைச்சிப் பொட்டலங்கள் தரப்பட்டன.

