திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலானது என்பதை சிங்கப்பூரில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் மீண்டும் வலியுறுத்தி உள்ளது. அதேநேரம் ஓரினக் காதலர்களின் கண்ணியத்தைத் தான் மதிப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.
ஆணோடு ஆண் உறவுகொள்வதைத் தடைசெய்யும் சட்டப்பிரிவு 377ஏ குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட்டதாகத் தக வல் வெளியாகியுள்ள நிலையில் தேவாலயம் இவ்வாறு கூறியது.

