காப்பிக்கடைகளில் உள்ள கழி
வறைகளின் தூய்மையை மேம்படுத்த ஜூரோங்கில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நடவடிக்கை, இப்போது மேலும் நான்கு வட்டாரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பொங்கோல், தெம்பனிஸ், பொத்தோங் பாசிர், செம்பவாங் ஆகியன அவை. ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை இந்தப் பகுதிகளில் தூய்மை மேம்பாட்டுத் திட்டம் செயல்படும்.
ஜூரோங் முன்னோடித் திட்டம் இவ்வாண்டு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை மூன்று காப்பிக் கடைகளில் நடப்பில் இருந்தது. இந்தக் காலகட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட சமூகத் தொண்
டூழியர்கள் காப்பிக் கடைகளுக்குச் சென்று சோதித்தனர்.
அசுத்தமான கழிவறைகள் பற்றி காப்பிக் கடை நடத்துவோரிடம் தெரிவித்தனர்.
கழிவறைகளைப் பயன்படுத்தும்போது பின்பற்றப்பட வேண்டிய ஒழுக்க நெறிமுறைகளை காப்பிக் கடை வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் நினைவூட்டினர்.
கழிவறைத் தூய்மை மேம்பாட்டுத் திட்டம் 'குடியிருப்பு வட்டார கழிவறை சமூகக் குழு' என்னும் அமைப்பின் ஏற்பாட்டில் தொடங்கப்பட்டது.
ஆண்டுதோறும் ஒரு மாத காலம் நடத்தப்படும் 'சிங்கப்பூரை சுத்தமாக வைத்திருப்போம்' என்னும் பிரசார இயக்கம் இவ்வாண்டு ஏப்ரலில் நடைபெற்றபோது புதிய திட்டம் குறித்த அறிவிப்பை பொது சுகாதார மன்றம் வெளியிட்டது.

