சிங்கப்பூரை அறிவார்ந்த தேசமாக மாற்ற மின்னிலக்கத் தொழில்நுட்பப் பயன்பாட்டை விரிவாக்குவது அவசியம் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற உலக நகர மேயர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு அவர் பேசினார்.
"இன்றைய மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து 60க்கும் மேற்பட்ட நகர மேயர்கள் பங்கேற்றுள்ளனர். கொவிட்-19க்குப் பிந்திய நட
வடிக்கைகளை நம்மில் பலர் எடுத்து வந்தாலும் புதிய துணைக் கிருமி கள் உருவாகும் அபாயத்தை மனத்தில் கொண்டு எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
"இன்றைய விவாதம் மின்னிலக்கம், கரிமக்குறைப்பு ஆகிய தலைப்பிலானது. நாம் மின்னிலக்கத்தை விரைந்து தழுவவேண்டிய அவசியத்தைக் கொள்ளைநோய் ஏற்படுத்தி உள்ளது.
"சிங்கப்பூரை அறிவார்ந்த தேசமாக மாற்ற கடினமாக உழைத்து வருகிறோம். மின்னிலக்கச் சமூகம், மின்னிலக்கப் பொருளியல், மின்னிலக்க அரசாங்கம் என்னும் முக்கியமான மூன்று தூண்கள் அதற்கு ஆதரவளிக்கின்றன.
"இதன் நோக்கம், நமது குடிமக்கள், வர்த்தகம், அரசாங்க அமைப்புகள் ஆகிய அனைத்தும் மின்னிலக்கத் திறன்களை அதிகம் பெறவேண்டும் என்பதும் மின்னிலக்கத் தொழில்நுட்பத்தின் அத்தனை அம்சங்களையும் பயன்படுத்த வேண்டும் என்பதும் ஆகும். இவ்வாறு செய்வதால் உற்பத்தித்
திறனை அதிகப்படுத்தி மக்களின் வாழ்க்கையை முன்னேற்றலாம்.
"கரிம வெளியேற்றத்தைக் குறைக்க சிங்கப்பூர் பாடுபட்டு வருகிறது. குறிப்பாக, இந்த நூற்றாண்டின் நடுப்பகுதிக்குள் கரிமம் இல்லாத நிலையை உருவாக்க நாடு கடப்பாடு கொண்டு உள்ளது. கரிமக் குறைப்பில் எல்லாரும் தங்களது பங்கை ஆற்ற மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை அவசியப்படுகிறது.
"ஆக, மின்னிலக்கமயம், கரிமக்குறைப்பு மட்டுமல்லாது மற்ற எல்லா வகையானவற்றுக்கும் தீர்வுகாண்
பதில் நாம் வெற்றியடைய இயலும். அதற்கு நமது மக்களை ஒருங்கிணைத்து, பொதுவான இலக்கை நோக்கி அவர்களைப் பணியாற்றச் செய்யவேண்டும்," என்றார் திரு லீ.

