இளையர்களுக்கு நிதி அறிவு புகட்டும் விழிப்புணர்வுப் பயிலரங்கு

இளையர்களுக்கு நிதி அறிவு புகட்டும் விழிப்புணர்வுப் பயிலரங்கு

2 mins read
ac3eca73-97ce-4281-a7cb-825c585f6b02
ஐந்து உறுப்பினர் கொண்ட குழுவாகத் தொடங்கிய 'ஃபின்கீக்ஸ்', இன்று 14 இளையர்கள் கொண்ட அமைப்பாக வளர்ந்து உள்ளது. (படத்தில்) குழுவை நிறுவிய சுவாமிநாதன் விசாகன், 17. படம்: ஃபின்கீக்ஸ் -

நிதி அறிவு தொடர்­பான விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வது, முத­லீடு செய்­யும் திறன்­களை வளர்ப்­பது என இளை­யர்­க­ளுக்­காக இயங்­கி­வ­ரும் லாப நோக்­க­மற்ற இளை­யர் அமைப்பு, 'ஃபின்கீக்ஸ்' (FinGeeks).

மாண­வர்­க­ளால் நிர்­வ­கிக்­கப்­படும் இந்த அமைப்பு, வெஸ்ட் கோஸ்ட் இளை­யர் குழு­வு­டன் இணைந்து இம்­மா­தம் 23ஆம் தேதி­யன்று உயர்­கல்வி நிலை­யங்­க­ளைச் சேர்ந்த மாண­வர்­க­ளுக்­காக நிதி அறிவு தொடர்­பான பயி­ல­ரங்­குக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

நிதி அறிவு தொடர்­பாக பள்­ளி­களில் கற்­பிக்­கப்­ப­டா­த­தால், எதிர்­கா­லத்­தில் கடி­ன­ உழைப்­பால் பெறும் பணத்தை எவ்­வாறு கையாள்­வது, எப்­படி முத­லீடு செய்­வது என்று தெரி­யா­மல் இளை­யர்­கள் பலர் திண்­டா­டு­கி­றார்­கள்.

இவர்­க­ளுக்கு உத­விக்­க­ரம் நீட்­டும் நோக்­கில் ஃபின்கீக்ஸ் இயங்­கி ­வ­ரு­கிறது. நிதி அறிவு மீது ஆர்­வங்­கொண்ட 14 இளை­யர்­கள், இந்த ஃபின்கீக்ஸ் ஆத­ர­வுக் குழு­வில் உள்­ள­னர்.

அவர்­கள் நிதி நிர்­வா­கம் தொடர்­பில் சான்­றி­தழ் பெற்­றுள்­ள­து­டன் நிதி தொடர்­பான போட்­டி­களில் கலந்­து­கொண்ட அனு­ப­வ­மும் உள்ள 17 முதல் 18 வய­திற்கு உட்­பட்ட மாண­வர்­க­ளா­வர்.

நிதித் துறை நிபு­ணர்­க­ளு­டன் கேள்வி பதில் அங்­கம் ஒன்­றும் இடம்­பெற்­றது. பங்­கேற்­பா­ளர்­கள் ஆர்­வத்­து­டன் தங்­கள் சந்­தே­கங்­க­ளைக் கேட்­டுத் தெளிந்­த­தாக ஃபின்கீக்ஸ் குழு நிறு­வ­னர் சுவா­மி­நாதன் விசா­கன், 17, குறிப்­பிட்­டார்.

'ஃபின்கீக்ஸ்' குழுவை அமைப்­ப­தற்­கான யோசனை, 2020ஆம் ஆண்­டி­று­தி­யில் தோன்­றி­ய­தா­க­வும் 2021ஆம் ஆண்டு அதி­கா­ர­பூர்­வ­மாக தான் பயின்ற ராஃபிள்ஸ் கல்வி நிலை­யத்­தில் ஐந்து உறுப்­பி­னர்­க­ளு­டன் தொடங்­கப்­பட்­ட­தா­க­வும் இவர் கூறுகிறார்.

தனக்கு 18 வய­தா­கும்­போது அதி­கா­ர­பூர்­வ­மாக லாப நோக்­க­மில்லா அமைப்­பாக அர­சாங்­கத்­தி­டம் குழு­வைப் பதிவு செய்­ய­வி­ருப்­ப­தா­கத் தனது எதிர்­கா­லத் திட்­டங்­க­ளை­யும் அவர் பகிர்ந்­து­கொண்­டார்.

"நிதி அறிவு என்­பது நமது சிங்­கப்­பூர் கல்­வித் திட்­டத்­தில் முறை­யா­கக் கற்­பிக்­கப்­ப­டாத ஒன்று. மேலும் வரு­மான ஏற்­றத்­தாழ்வு சிங்­கப்­பூ­ரில் அதி­க­ரித்­து­வ­ரும் ஒரு பிரச்­சி­னை­யாக உள்­ளது. இளை­யர்­கள் நிச்­ச­ய­மாக நிதி நிர்­வா­கத்­தில் அக்­கறை கொண்­டுள்­ள­னர். அத­னால் அவர்­க­ளுக்கு உதவ இந்த குழு­வைத் தொடங்­கி­னேன்," என்­றார்.

பயி­ல­ரங்­கில் 32 பங்­கேற்­பா­ளர்­கள் கலந்­து­கொண்டு பய­ன­டைந்­தார்­கள்.

செய்தி: அருணா கந்­த­சாமி