மருத்துவமனைகளில் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன

மருத்துவமனைகளில் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன

1 mins read
26a228e8-512f-4445-9479-c3f985f8e3e5
-

மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் பரா­ம­ரிப்பு இல்­லங்­க­ளி­லும் தங்கி சிகிச்சை பெறு­வோரை நேரில் சென்று பார்ப்­ப­வர்­க­ளுக்­கான கட்­டுப்­பா­டு­கள் இம்­மா­தம் 31ஆம் தேதி வரை நீட்­டிக்­கப்­ப­டு­கிறது.

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க இந்­தக் கட்­டுப்­பா­டு­கள் தொடர்­கின்­றன.

சிங்­கப்­பூ­ரில் சமூக அள­வி­லான கிரு­மிப் பர­வல் கடந்த ஒரு வார­மா­கப் படிப்­ப­டி­யா­கக் குறைந்­துள்­ளது.

இருப்­பி­னும், மருத்­து­வ­ம­னை­களில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட, பாதிக்­கப்­ப­டாத நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­மாக இருப்­ப­தாக சுகா­தார அமைச்சு நேற்று கூறி­யது.

பரா­ம­ரிப்பு இல்­லங்­களில் தங்கு ­ப­வர்­களில் மேலும் பல­ருக்கு கொவிட்-19 பாதிப்பு ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் அமைச்சு தெரி­வித்­தது.

மருத்துவமனையில் தங்கும் நோயாளிகளை அதிகபட்சம் இரண்டு பேர் மட்டுமே நேரில் சென்று பார்க்கலாம்.

ஒரே நேரத்தில் ஒருவர் மட்டும் நோயாளியின் படுக்கை அருகில் இருக்கலாம்.

கவலைக்கிடமாக இருக்கும் நோயாளிகளை அதிகபட்சம் ஐந்து பேர் நேரில் சென்று பார்க்கலாம்.

ஒரே நேரத்தில் இருவர் மட்டுமே படுக்கை அருகில் இருக்கலாம்.

நோயாளிகள் அருகில் சென்று அவர்களை பார்க்க வழங்கப்படும் அதிகபட்ச நேரம் தொடர்ந்து 30 நிமிடங்களாக இருக்கும் என்று அமைச்சு கூறியது.