மியன்மார் குறித்து ஆசியான் ஏமாற்றம்

1 mins read
f9a5433f-7ba1-45b7-a9f9-2bcb816e3ad8
-

மியன்­மா­ரில் உள்ள அர­சி­யல் நெருக்­க­டிக்­குத் தீர்­வு­கா­ணும் திட்­டங்­களில் முன்­னேற்­றம் காணப்­ப­டா­தது குறித்து ஏமாற்­றம் அடைந்­த­தாக ஆசி­யான் வெளி­யு­றவு அமைச்­சர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

சென்ற புதன்­கி­ழமை இடம்­பெற்ற சந்­திப்­பில் மியன்­மா­ரின் அண்மை நில­வ­ரம் குறித்து அமைச்­சர்­கள் விரி­வா­கக் கலந்­து­பே­சி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

சென்ற மாதம் அங்கு எதிர்த்­தரப்பு ஆர்­வ­லர்­க­ளுக்கு மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது குறித்­தும் அமைச்சர்­கள் கலந்­து­ரை­யா­டி­னர்.

ஐந்து அம்ச அமை­தித் திட்­டத்தை முழு­மை­யா­க­வும் குறித்த நேரத்­தி­லும் மியன்­மார் அர­சாங்­கம் நடை­மு­றைப்­ப­டுத்­தத் தவ­றி­யது, அதன் கடப்­பாடு இல்­லாத நிலை­யைக் காட்­டு­வ­தாக அமைச்­சர்­கள் குறிப்­பிட்­ட­னர்.

முதல்­மு­றை­யாக ஆசி­யான் அமைச்­சர்­கள் கூட்­ட­றிக்­கை­யில் இவ்­வாறு கடு­மை­யான வார்த்­தை­கள் இடம்­பெற்­றுள்­ள­தா­கக் கூறப்­பட்­டது.

ஆசியானில் அங்கம் வகிக்கும் நாட்டின் உள்நாட்டு நிலவரம் பற்றி அமைச்சர்கள் கூட்டறிக்கையில் குறிப்பிடுவது இது இரண்டாவது முறை.

கூடுதல் செய்தி: மோனலிசா