முன்­னோ­டித் தலை­மு­றை­யி­ன­ருக்கு நன்றி கூறும் பாடல்

முன்­னோ­டித் தலை­மு­றை­யி­ன­ருக்கு நன்றி கூறும் பாடல்

2 mins read
4f991742-a594-4f32-915e-f30551d1c079
பாடல் வெளியீட்டு விழாவில் (இடமிருந்து) சிறப்பு விருந்தினர் திரு ஆர்.தினகரன், பிரேம்குமார், கவிஞர் நெப்போலியன். படம்: பிரபு -

யுகேஷ் கண்­ணன்

சிங்­கப்­பூ­ரின் நல்­லி­ணக்­கத்­தை­யும் ஒற்­று­மை­யை­யும் வலி­யு­றுத்­தும் வண்­ணம் மென்­பொ­ருள் பொறி­யா­ள­ரான நட்சத்திரம் பிரேம்­குமார், 35, 'தேசமே, என் தேசமே' என்ற பாடலை தேசிய தினத்தை ஒட்டி இயக்கி, ஒலிப்­ப­திவு செய்­துள்­ளார். இப்­பா­ட­லின் மூலம் சிங்­கப்­பூ­ரின் இயற்கை அழகு, வளர்ச்சி, பொரு­ளி­யல் வல்­லமை போன்­ற­வற்­றைப் பதிவு செய்­தி­ருப்­ப­தாக இவர் கூறு கிறார்.

ஆண்­டு­தோ­றும் தேசிய தினத்­தை­யொட்டி ஆங்­கி­லப் பாடல்­கள் அதி­கம் இயற்­றப்­ப­டு­வதை உணர்ந்த பிரேம்­கு­மார், நாட்­டிற்­கா­க­வும் சமூ­கத்­திற்­கா­க­வும் ஒரு தமிழ்ப் பாட­லைத் உருவாக்க வேண்­டும் என முடி­வெ­டுத்­தார். இதற்­கா­கக் கடந்த ஓராண்டு கால­மா­கத் தன் குழு­வு­டன் இணைந்து பணி­யாற்­றி­யது மறக்க முடி­யாத ஓர் அனு­ப­வம் என்­றும் பகிர்ந்­து­கொள்கிறார்.

திரு­வாட்டி பிரபு காந்­தி­யு­டன் இணைந்து இப்­பா­ட­லை உருவாக்கியுள்ள பிரேம்­கு­மார், பல ஆண்டு­க­ளாக பாடல்­கள், காணொ­ளி­கள், குறும்­ப­டங்­கள் போன்­ற­வற்றை இயக்கி வந்­த­வர்.

"சிங்­கப்­பூ­ரின் தற்­போ­தைய நிலையை எதிர்­கா­லத் தலை­முறை­யி­ன­ருக்கு எடுத்­துக்­காட்­டும் வித­மாக அதி­கம் அறிந்­தி­ராத பகு­தி­கள், நவீன வட்­டா­ரங்­கள் என சிங்­கப்­பூ­ரில் உள்ள குறிப்­பி­டத்­தக்க இடங்­க­ளைக் காணொ­ளி­யில் காட்­சிப்­ப­டுத்­தி­யதே பாட­லின் சிறப்பு அம்­ச­மா­கும்.

வருங்காலச் சந்­த­தி­யி­னர் இந்­தக் காணொ­ளி­யைப் பார்க்­கும்­போது, நாடு மேலும் எத்­த­கைய வளர்ச்சி கண்­டுள்­ளது என்­பதை அறிந்­து­கொள்­வர்," என்­றும் கூறுகிறார் பிரேம்­கு­மார்.

தேசிய தினத்­தை­யொட்டி கடந்த ஜூலை 30ஆம் தேதி­யன்று தேசிய நூல­கத்­தில் இவ­ரின் பாடல் வெளி­யி­டப்­பட்­டது. அத்­து­டன் இந்­தப் பாடல் பல்­வேறு சமூக ஊட­கத் தளங்­க­ளி­லும் பதி­வேற்­றம் செய்­யப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூ­ரின் முன்­னோ­டித் தலை­மு­றை­யி­ன­ருக்கு வருங்­

கா­லத்­ தலை­மு­றை­யி­ன­ரான குழந்­தை­கள் நன்றி கூறு­வது போலவும் பாடல் காட்சி அமைந்­துள்­ளது.

பாடல் வரி­களை எழு­திய கவி­ஞர் நெப்­போ­லி­யன், "சிங்­கப்­பூ­ரின் சிறப்­பு­களை எளி­மை­யான வார்த்­தை­கள் மூலம் எடுத்­துச்­சொல்ல முயன்­றுள்­ளேன். நான்கு அதி­காரத்­துவ மொழி­களில் 'நன்றி' என்ற வார்த்­தையை தொகை­ய­றா­வாக வரி­களில் இணைத்­துள்­ளேன். சிங்­கப்­பூ­ரின் வர­லாற்­றைக் கூறும் இப்­பா­டல், காலம் கடந்து நிலைத்து நிற்­கும்," என்று நம்­பிக்­கை­யு­டன் கூறி­னார். இசைத் துறை­யில் 20 ஆண்­டு­க­ளுக்­கும் மேலான அனு­ப­வ­முள்ள ஷ்ர­வன் கலை, இப்­பா­ட­லுக்கு இசை­ய­மைத்­துள்­ள­தோடு சௌம்யா தணி­காசலம் என்ற பாட­கி­யு­டன் இணைந்து பாடி­யும் உள்­ளார்.