உட்லண்ட்சில் இறுதிச் சடங்கு வாகனம் தீப்பிடித்துக் கொண்டது

தொங்கும் விளக்குகளும் சீனப் பாரம்பரிய வடிவிலான கூரையும் கொண்டு வடிவமைக்கப்பட்ட இறுதிச் சடங்கு வாகனம் ஒன்று உட்லண்ட்சில் தீப்பிடித்துக்கொண்டது.

சம்பவம் உட்லண்ட்ஸ் ஸ்த்ரீட் 31 புளோக் 313 அருகில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 9) அன்று நடந்தது.

இறுதிச் சடங்கு நடந்த இடத்தின் அருகே வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

ஒரு பெண்ணின் இறுதிச் சடங்கு அது என்று ஷின் மின் டெய்லி செய்தித்தாள் தெரிவித்தது.

அங்கிருந்த ஆடவர்கள் சிலர், வாளிகளில் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இறுதிச் சடங்குக்காக பின்னர் வேறு ஒரு வாகனம் வரவழைக்கப்பட்டது.

தீயணைப்பு வாகனம் வரும் முன்பே தீ அணைக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

புளோக் 313ல் வசிக்கும் திருவாட்டி லெட்சுமி, 59, கார் நிறுத்துமிடத்தில் புகை கிளம்பியதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்ததாகக் கூறினார்.

"நிறைய புகை கிளம்பியதைப் பார்த்தேன். பிளாஸ்டிக் எரியும் நாற்றம் அடித்தது. ஐந்து ஆடவர்கள் வாளிகளில் தண்ணீரை நிரப்பி தீயை அணைத்தனர். பத்தே நிமிடத்தில் எல்லாம் முடிந்துவிட்டது," என்றார் திருவாட்டி லெட்சுமி.

தீக்கான காரணத்தை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை விசாரித்து வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!